search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    9 கோடியே 49 லட்சம் பேருக்கு கொரோனா - அப்டேட்ஸ்

    உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 கோடியே 49 லட்சத்தை கடந்தது.
    ஜெனீவா:

    சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 218 நாடுகள்- பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

    இந்த வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு பல நாடுகளில் மக்கள் பயன்பாட்டிற்கும் கொண்டுவரப்பட்டுள்ளது. தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டபோதும் கொரோனா வைரஸ் உருமாறி வேகமாக பரவி வருகிறது.

    இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 9 கோடியே 49 லட்சத்தை கடந்துள்ளது. குறிப்பாக கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 6 லட்சத்து 36 ஆயிரத்து 717 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    அவற்றில், அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 1 லட்சத்து 99 ஆயிரத்து 594 பேருக்கும், பிரேசிலில் 62 ஆயிரத்து 452 பேருக்கும், இங்கிலாந்தில் 41 ஆயிரத்து 346 பேருக்கும் புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 

    அதேபோல் இந்திய அரசு நேற்று வெளியிட்ட தகவலில் 24 மணி நேரத்தில் 15 ஆயிரத்து 158 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 9 கோடியே 49 லட்சத்து 21 ஆயிரத்து 985 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

    வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 2 கோடியே 51 லட்சத்து 34 ஆயிரத்து 404 பேர் சிகிச்சை பெற்று வருகிறனர். சிகிச்சை பெறுபவர்களில் 1 லட்சத்து 11 ஆயிரத்து 601 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 

    வைரஸ் பாதிப்பில் இருந்து 6 கோடியே 77 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளது . ஆனாலும், கொரோனாவால் இதுவரை 20 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

    கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

    அமெரிக்கா - 2,43,02,870
    இந்தியா - 1,05,58,710
    பிரேசில் - 84,56,705
    ரஷியா - 35,44,623
    இங்கிலாந்து - 33,57,361
    Next Story
    ×