என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கியூபா மீது பொருளாதார தடைகளை விதித்த அமெரிக்கா
Byமாலை மலர்17 Jan 2021 12:35 AM GMT (Updated: 17 Jan 2021 12:35 AM GMT)
கடுமையான மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதாகக் கூறி கியூபா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.
வாஷிங்டன்:
அமெரிக்கா மற்றும் கியூபா இடையில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக மோதல் போக்கு நீடித்து வந்த நிலையில், ஜனாதிபதி ஒபாமாவின் ஆட்சிக் காலத்தில் இருநாடுகளுக்கும் இடையே நட்பு மலர்ந்தது. ஆனால் அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவி ஏற்றது முதல் அவர் கியூபாவுடன் விரோத போக்கை கையாண்டு வருகிறார்.
இந்தநிலையில் அவரது பதவிக் காலம் இன்னும் சில நாட்களில் முடிய இருக்கும் நிலையில் கியூபாவுக்கு எதிராக அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
அந்த வகையில் கியூபாவை பயங்கரவாதத்துக்கு ஆதரவு அளிக்கும் நாடாக கடந்த வாரம் அமெரிக்கா அறிவித்தது. இதற்கு கியூபா கடும் கண்டனம் தெரிவித்தது.
இந்த நிலையில் கடுமையான மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதாகக் கூறி கியூபா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. அமெரிக்க நிதித்துறை செயலாளர் ஸ்டீவன் முனுச்சின் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார்.
இது பற்றி அவர் கூறுகையில் ‘‘கியூபாவிலும், உலகெங்கிலும் உள்ள மோசமான மனித உரிமை நிலைமைகளை நிவர்த்தி செய்ய அமெரிக்கா தொடர்ந்து அனைத்து கருவிகளையும் பயன்படுத்தும். அதன்படி உலக மனித உரிமைகள் மீறல் பொறுப்புக்கூறல் சட்டத்தின்கீழ் கியூபாவின் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன’’ என்றார்.
அமெரிக்கா மற்றும் கியூபா இடையில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக மோதல் போக்கு நீடித்து வந்த நிலையில், ஜனாதிபதி ஒபாமாவின் ஆட்சிக் காலத்தில் இருநாடுகளுக்கும் இடையே நட்பு மலர்ந்தது. ஆனால் அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவி ஏற்றது முதல் அவர் கியூபாவுடன் விரோத போக்கை கையாண்டு வருகிறார்.
இந்தநிலையில் அவரது பதவிக் காலம் இன்னும் சில நாட்களில் முடிய இருக்கும் நிலையில் கியூபாவுக்கு எதிராக அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
அந்த வகையில் கியூபாவை பயங்கரவாதத்துக்கு ஆதரவு அளிக்கும் நாடாக கடந்த வாரம் அமெரிக்கா அறிவித்தது. இதற்கு கியூபா கடும் கண்டனம் தெரிவித்தது.
இந்த நிலையில் கடுமையான மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதாகக் கூறி கியூபா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. அமெரிக்க நிதித்துறை செயலாளர் ஸ்டீவன் முனுச்சின் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார்.
இது பற்றி அவர் கூறுகையில் ‘‘கியூபாவிலும், உலகெங்கிலும் உள்ள மோசமான மனித உரிமை நிலைமைகளை நிவர்த்தி செய்ய அமெரிக்கா தொடர்ந்து அனைத்து கருவிகளையும் பயன்படுத்தும். அதன்படி உலக மனித உரிமைகள் மீறல் பொறுப்புக்கூறல் சட்டத்தின்கீழ் கியூபாவின் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X