என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
50.4 சதவிகிதம் தான்... மிகக்குறைந்த செயல்திறன் கொண்ட சீனாவின் கொரோனா தடுப்பூசி
Byமாலை மலர்13 Jan 2021 11:22 PM GMT (Updated: 13 Jan 2021 11:22 PM GMT)
சீனாவின் சினோவக் கொரோனா தடுப்பூசி 50.4 சதவிகிதம் செயல்திறன் கொண்டது என தெரியவந்துள்ளது.
பிரேசிலியா:
2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரசால் லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ள நிலையில் வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு பல நாடுகளில் மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
குறிப்பாக, இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனகா நிறுவனம் உருவாக்கியுள்ள தடுப்பூசி, அமெரிக்காவின் பைசர் மற்றும் மாடர்னா நிறுவன தடுப்பூசிகள் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் நல்ல பயன் தருகிறது. இந்த தடுப்பூசிகளின் செயல்திறன் 90 சதவிகிதத்திற்கும் மேல் உள்ளது.
இந்த தடுப்பூசி 90 சதவிகிதம் செயல்திறன் கொண்டது என சீன நிறுவனம் தெரிவித்தது. இதையடுத்து, சீனாவின் சினோவக் நிறுவன கொரோனா தடுப்பூசியை பிரேசில் நாடு வாங்கியது.
இதையடுத்து, இந்த சினோவக் தடுப்பூசியை தன்னார்வலர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்யும் நடைமுறைகள் பிரேசில் நடைபெற்றது. சமீபத்தில் நடைபெற்ற பரிசோதனையின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது.
அந்த பரிசோதனை முடிவுகளின் படி சீனாவின் சினோவக் தடுப்பூசி 50.4 சதவிகிதம் செயல்திறன் கொண்டது என தெரியவந்துள்ளது. மாடர்னா, பைசர், ஆக்ஸ்போர்டு தடுப்பூசிகளை ஒப்பிடும் போது சீனாவின் தடுப்பூசி மிகவும் குறைவான செயல்திறன் கொண்டதாக உள்ளது.
சீனாவின் சினோவக் அங்கீகரிக்கக்கூடிய செயல்திறனை கூட இல்லாமல் இருப்பது ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறைவான செயல்திறன் காரணமாக சீன தடுப்பூசியால் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாத சூழல் ஏற்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரசால் லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ள நிலையில் வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு பல நாடுகளில் மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
குறிப்பாக, இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனகா நிறுவனம் உருவாக்கியுள்ள தடுப்பூசி, அமெரிக்காவின் பைசர் மற்றும் மாடர்னா நிறுவன தடுப்பூசிகள் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் நல்ல பயன் தருகிறது. இந்த தடுப்பூசிகளின் செயல்திறன் 90 சதவிகிதத்திற்கும் மேல் உள்ளது.
இதற்கிடையில், சீனாவும் கொரோனா தடுப்பூசி உருவாக்கியுள்ளது. அந்நாட்டின் சினோவக் பயொடெக் நிறுவனம் சினோவக் என்ற பெயரில் கொரோனா தடுப்பூசியை உருவாக்கியுள்ளது.
இதையடுத்து, இந்த சினோவக் தடுப்பூசியை தன்னார்வலர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்யும் நடைமுறைகள் பிரேசில் நடைபெற்றது. சமீபத்தில் நடைபெற்ற பரிசோதனையின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது.
அந்த பரிசோதனை முடிவுகளின் படி சீனாவின் சினோவக் தடுப்பூசி 50.4 சதவிகிதம் செயல்திறன் கொண்டது என தெரியவந்துள்ளது. மாடர்னா, பைசர், ஆக்ஸ்போர்டு தடுப்பூசிகளை ஒப்பிடும் போது சீனாவின் தடுப்பூசி மிகவும் குறைவான செயல்திறன் கொண்டதாக உள்ளது.
சீனாவின் சினோவக் அங்கீகரிக்கக்கூடிய செயல்திறனை கூட இல்லாமல் இருப்பது ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறைவான செயல்திறன் காரணமாக சீன தடுப்பூசியால் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாத சூழல் ஏற்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X