என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மெக்சிகோவில் போதைப்பொருள் கும்பலுக்கும், போலீசாருக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை - 10 பேர் பலி
Byமாலை மலர்13 Jan 2021 1:04 AM GMT (Updated: 13 Jan 2021 1:04 AM GMT)
மெக்சிகோவில் போதைப்பொருள் கும்பலுக்கும், போலீசாருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச்சண்டையில் 10 பேர் பலியானார்கள்.
மெக்சிகோ சிட்டி:
உலகிலேயே அதிக அளவில் மெக்சிகோவில் போதைப்பொருள் கடத்தல்கள் நடக்கின்றன. அங்குள்ள பல்வேறு மாகாணங்களில் ஆயுதமேந்திய போதைப்பொருள் கும்பல்கள் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.
இந்த போதைப்பொருள் கும்பல்கள் தங்களது தொழிலுக்கு இடையூறாக இருக்கும் போலீசார் மீது கொலை வெறி தாக்குதல் நடத்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் மெக்சிகோவின் மத்திய பகுதியில் உள்ள குவானாஜுவாடோ மாகாணத்தில் வில்லாகிரான் என்ற நகரில் போலீசார் மற்றும் சட்ட அமலாக்க துறை அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு காரில் வந்த போதைப்பொருள் கும்பல் ஒன்று போலீசாரை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டது. இதில் போலீஸ் அதிகாரி ஒருவரின் உடலில் துப்பாக்கி குண்டுகள் துளைத்து சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் இந்த துப்பாக்கி சூட்டில் அந்த பகுதியில் காரில் சென்று கொண்டிருந்த பொதுமக்களில் ஒருவரும் பலியானார்.
அதனைத்தொடர்ந்து போலீசார் தங்களது துப்பாக்கிகளால் போதைப்பொருள் கும்பலுக்கு தக்க பதிலடி கொடுத்தனர். இரு தரப்புக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் போதைப்பொருள் கும்பலை சேர்ந்த 8 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து துப்பாக்கி, வெடிகுண்டு உள்ளிட்ட ஆயுதங்களும், போதைப்பொருள் மற்றும் கார்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
உலகிலேயே அதிக அளவில் மெக்சிகோவில் போதைப்பொருள் கடத்தல்கள் நடக்கின்றன. அங்குள்ள பல்வேறு மாகாணங்களில் ஆயுதமேந்திய போதைப்பொருள் கும்பல்கள் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.
இந்த போதைப்பொருள் கும்பல்கள் தங்களது தொழிலுக்கு இடையூறாக இருக்கும் போலீசார் மீது கொலை வெறி தாக்குதல் நடத்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் மெக்சிகோவின் மத்திய பகுதியில் உள்ள குவானாஜுவாடோ மாகாணத்தில் வில்லாகிரான் என்ற நகரில் போலீசார் மற்றும் சட்ட அமலாக்க துறை அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு காரில் வந்த போதைப்பொருள் கும்பல் ஒன்று போலீசாரை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டது. இதில் போலீஸ் அதிகாரி ஒருவரின் உடலில் துப்பாக்கி குண்டுகள் துளைத்து சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் இந்த துப்பாக்கி சூட்டில் அந்த பகுதியில் காரில் சென்று கொண்டிருந்த பொதுமக்களில் ஒருவரும் பலியானார்.
அதனைத்தொடர்ந்து போலீசார் தங்களது துப்பாக்கிகளால் போதைப்பொருள் கும்பலுக்கு தக்க பதிலடி கொடுத்தனர். இரு தரப்புக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் போதைப்பொருள் கும்பலை சேர்ந்த 8 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து துப்பாக்கி, வெடிகுண்டு உள்ளிட்ட ஆயுதங்களும், போதைப்பொருள் மற்றும் கார்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X