என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அமெரிக்காவில் வெள்ளை மாளிகை துணை பத்திரிகை செயலாளராக இந்திய பெண் நியமனம்
Byமாலை மலர்9 Jan 2021 9:12 PM GMT (Updated: 9 Jan 2021 9:12 PM GMT)
வெள்ளை மாளிகையில் துணை ஜனாதிபதிக்கான துணை பத்திரிகை செயலாளராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சப்ரினா சிங் என்ற பெண் நியமிக்கப்பட்டுள்ளார்.
வாஷிங்டன்:
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன் மற்றும் துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள கமலா ஹாரிஸ் ஆகிய இருவரும் வருகிற 20-ந் தேதி பதவி ஏற்க உள்ளனர்.
இதையொட்டி ஜோ பைடன் தனது தலைமையில் அமையவுள்ள புதிய அரசில் முக்கிய பொறுப்புகளுக்கு ஆட்களை நியமனம் செய்து வருகிறார். இதில் இந்திய வம்சாவளியினருக்கு அவர் முக்கியத்துவம் அளித்து வருகிறார். .
அந்த வகையில் தனது நிர்வாகத்தில் பல முக்கிய பொறுப்புகளுக்கு இந்திய வம்சாவளியினரை அவர் நியமித்துள்ளார்.
அந்த வகையில் வெள்ளை மாளிகையில் துணை ஜனாதிபதிக்கான துணை பத்திரிகை செயலாளராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சப்ரினா சிங் என்ற பெண் நியமிக்கப்பட்டுள்ளார்.
நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் கமலா ஹாரிசின் பிரசார குழுவின் செய்தி தொடர்பாளராக சப்ரினா சிங் இருந்தார். அதற்கு முன்னர் ஜனாதிபதி வேட்பாளர் போட்டிக்கு போட்டியிட்ட கோடீஸ்வரர் மைக் புளூம்பெர்க் மற்றும் கோரி புக்கர் ஆகியோரின் பிரசாரத்தின் தேசிய பத்திரிகை செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.
அதற்கு முன்னர் ஜனநாயக தேசிய குழுவில் தகவல் தொடர்பு துணை இயக்குனராகவும், ஹிலாரி கிளிண்டனின் 2016 ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தில் பிராந்திய தகவல் தொடர்பு இயக்குனராகவும் சப்ரினா சிங் பணியாற்றியிருக்கிறார்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன் மற்றும் துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள கமலா ஹாரிஸ் ஆகிய இருவரும் வருகிற 20-ந் தேதி பதவி ஏற்க உள்ளனர்.
இதையொட்டி ஜோ பைடன் தனது தலைமையில் அமையவுள்ள புதிய அரசில் முக்கிய பொறுப்புகளுக்கு ஆட்களை நியமனம் செய்து வருகிறார். இதில் இந்திய வம்சாவளியினருக்கு அவர் முக்கியத்துவம் அளித்து வருகிறார். .
அந்த வகையில் தனது நிர்வாகத்தில் பல முக்கிய பொறுப்புகளுக்கு இந்திய வம்சாவளியினரை அவர் நியமித்துள்ளார்.
அந்த வகையில் வெள்ளை மாளிகையில் துணை ஜனாதிபதிக்கான துணை பத்திரிகை செயலாளராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சப்ரினா சிங் என்ற பெண் நியமிக்கப்பட்டுள்ளார்.
நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் கமலா ஹாரிசின் பிரசார குழுவின் செய்தி தொடர்பாளராக சப்ரினா சிங் இருந்தார். அதற்கு முன்னர் ஜனாதிபதி வேட்பாளர் போட்டிக்கு போட்டியிட்ட கோடீஸ்வரர் மைக் புளூம்பெர்க் மற்றும் கோரி புக்கர் ஆகியோரின் பிரசாரத்தின் தேசிய பத்திரிகை செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.
அதற்கு முன்னர் ஜனநாயக தேசிய குழுவில் தகவல் தொடர்பு துணை இயக்குனராகவும், ஹிலாரி கிளிண்டனின் 2016 ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தில் பிராந்திய தகவல் தொடர்பு இயக்குனராகவும் சப்ரினா சிங் பணியாற்றியிருக்கிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X