என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
150 ஆண்டு கால அமெரிக்க வரலாற்றில் புதிய ஜனாதிபதியின் பதவியேற்பை புறக்கணிக்கும் டிரம்ப்
Byமாலை மலர்9 Jan 2021 2:01 PM GMT (Updated: 9 Jan 2021 3:53 PM GMT)
அமெரிக்க புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்கும் விழாவில் தான் பங்கேற்கப் போவதில்லை என டிரம்ப் அறிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
வாஷிங்டன்:
அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் 3 ந்தேதி நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றார். வருகிற 20ந்தேதி அவரது பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. அதில் முறைப்படி அமெரிக்காவின் 46வது அதிபராக பைடன் பொறுப்பேற்க உள்ளார்.
ஆனால், பைடனின் வெற்றியை ஏற்க மறுத்த அதிபர் டிரம்ப், தேர்தலில் மோசடி நடந்துள்ளது என தொடர்ந்து குற்றச்சாட்டுகளை கூறினார். இதற்கிடையில், ஜோ பைடனின் தேர்தல் வெற்றியை உறுதி செய்ததற்கான சான்றிதழை வழங்கும் பணிகளை நாடாளுமன்றம் மேற்கொண்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டிரம்பின் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் கடந்த 6ந்தேதி நாடாளுமன்றம் முன் திரண்டு முற்றுகை போராட்டம் நடத்தினர்.
ஜனாதிபதி தேர்தலில் தோல்வியை ஒப்புக் கொள்ளாத டிரம்ப் ஆதரவாளர்கள் நாடாளுமன்றக் கட்டடத்தில் புகுந்து நடத்திய வன்முறை உலக அரங்கில் அதிர்வலையை ஏற்படுத்தியது.
அவர்களை தடுத்து நிறுத்தி கலைந்து போகும்படி போலீசார் எச்சரித்தனர். தொடர்ந்து, கலகக்காரர்களை வெளியேற்றும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். கட்டுக்கடங்காத கூட்டம் கூடிய நிலையில், கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன. இதனால் ஒரு கட்டத்தில் டிரம்ப் ஆதரவாளர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதில், போராட்டக்காரர்களை கலைக்க அவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் பெண் ஒருவர் உயிரிழந்து உள்ளார். இந்த சம்பவத்தில் மொத்தம் 2 பெண்கள் உள்பட 5பேர் இதுவரை உயிரிழந்து உள்ளனர்.
இதனையொட்டி டிரம்பை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் டிரம்ப் தனது டுவிட்டர் பதிவில், வரும் 20ம் தேதி நடக்கும் ஜோ பைடன் பதவி ஏற்பு விழாவிற்குச் செல்லவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 150 ஆண்டு கால வரலாற்றில் புதிய ஜனாதிபதியின் பதவியேற்பைப் புறக்கணிக்கும் முதல் முன்னாள் ஜனாதிபதியாக டிரம்ப் கருதப்படுவார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த ஜோ பைடன் "இது ஒரு நல்ல விஷயம், நான் அவரைப் பற்றி எண்ணிய மோசமான கருத்துக்களைக் கூட மீறிவிட்டார், அவர் நாட்டிற்கு ஒரு சங்கடமாக இருந்தார், உலகம் முழுவதும் அமெரிக்கர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளார். அவர் அந்த பதவியை வகிக்க தகுதியற்றவர்" என்று பிடன் கூறினார்.
எவ்வாறாயினும், துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் தனது பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைவதாக பைடன் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X