search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மூதாட்டி வேலு பாப்பானி
    X
    மூதாட்டி வேலு பாப்பானி

    இலங்கையின் மிகவும் வயதான மூதாட்டி மரணம்

    இலங்கையின் மிகவும் வயதான மூதாட்டி வேலு பாப்பானி மரணம் அடைந்தார்.

    கொழும்பு:

    இலங்கையின் மிகவும் வயதான மூதாட்டியாக இருந்தவர் வேலு பாப்பானி. 117 வயதுடைய இவர் தெடம்கொடாவில் உள்ள குளோடன் தோட்டம் என்ற இடத்தில் வசித்து வந்தார். 1903-ம் ஆண்டு மே மாதம் 3-ந்தேதி பிறந்த இவர், ‘இலங்கையின் மூத்த தாய்’ என்று கவுரவிக்கப்பட்டார்.

    இவரை மகாலட்சுமி என்ற பெண் பராமரித்து வந்தார். இந்த நிலையில் உணவு உட்கொள்வதில் ஏற்பட்ட சிரமம் காரணமாக கடந்த 29-ந்தேதி நாகொட ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அன்று இரவு அவர் மரணம் அடைந்தார்.

    Next Story
    ×