search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தடுப்பூசி போட்டுக் கொண்ட கமலா ஹாரிஸ்
    X
    தடுப்பூசி போட்டுக் கொண்ட கமலா ஹாரிஸ்

    கொரோனா தடுப்புக்கான மாடர்னா மருந்தின் முதல் டோசை எடுத்து கொண்ட கமலா ஹாரிஸ்

    அமெரிக்காவின் துணை அதிபராக தேர்வான கமலா ஹாரிசுக்கு கொரோனா தடுப்புக்கான மாடர்னா மருந்தின் முதல் டோஸ் உட்செலுத்தப்பட்டது.
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கையும், உயிரிழப்பும் அதிக அளவில் உள்ளன. இவற்றில் பிற நாடுகளை பின்னுக்கு தள்ளி விட்டு முதல் இடம் பிடித்து உள்ளது அந்த நாடு.

    இதற்கிடையே கொரோனா தடுப்புக்கான மாடர்னா மருந்து கண்டறியப்பட்டது அந்நாட்டு மக்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தியது.
     
    சமீபத்தில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஜோ பைடன் அமெரிக்காவின் அடுத்த அதிபராக தேர்வு செய்யப்பட்டார். அடுத்த ஆண்டு ஜனவரியில் அவர் பதவி ஏற்க இருக்கிறார்.

    அமெரிக்காவின் டெலாவேர் மாகாணத்தில் நியூவார்க் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் கடந்த 22-ம் தேதி அதிபராக தேர்வான ஜோ பைடனுக்கு கொரோனா தடுப்புக்கான பைசர் மருந்தின் முதல் டோஸ் உட்செலுத்தப்பட்டது.

    இந்நிலையில், அமெரிக்காவின் துணை அதிபராக தேர்வான கமலா ஹாரிஸ் மற்றும் அவரது கணவர் ஆகியோருக்கு கொரோனா தடுப்புக்கான மாடர்னா மருந்தின் முதல் டோஸ் உட்செலுத்தப்பட்டது.

    அப்போது பேசிய கமலா ஹாரிஸ், தடுப்பூசி போட்டுக் கொள்வது மிக எளிதானது. நன்றி, அதனை அனைவரும் எடுத்துக் கொள்ளுங்கள். இரண்டாவது தடுப்பூசி பெற ஆவலுடன் காத்திருக்கிறேன். உண்மையில் இது உயிர்களைக் காப்பாற்றுவதாகும். நான் விஞ்ஞானிகளை நம்புகிறேன், விஞ்ஞானிகள் தடுப்பூசியை உருவாக்கி ஒப்புதல் அளித்ததால் நான் அவர்களை நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×