search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டிரம்ப் - பைடன்
    X
    டிரம்ப் - பைடன்

    கொரோனா நிவாரண மசோதாவில் டிரம்ப் கையெழுத்திட மறுப்பது பேரழிவு விளைவை ஏற்படுத்தும் - ஜோ பைடன்

    கொரோனா நிவாரண மசோதாவில் டிரம்ப் கையெழுத்திட மறுப்பது பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தும் என அதிபர் தேர்தல் வெற்றியாளர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
    வாஷிங்டன்:

    உலக அளவில் கொரோனா வைரஸ்  பாதிப்பில் முதலிடத்தில் உள்ள நாடு அமெரிக்கா. அந்நாட்டில் கொரோனா நிவாரணத்துக்காக 900 பில்லியன் அமெரிக்க டாலரை (இந்திய மதிப்பில் ரூ.66 லட்சம் கோடி) ஒதுக்கீடு செய்ய அந்நாட்டு நாடாளுமன்றம் சமீபத்தில் ஒப்புதல் அளித்தது.

    இதையடுத்து, இது தொடர்பான கொரோனா நிவாரண மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட உள்ளது. 

    மசோதாவில் டிரம்ப் கையெழுத்திட்டால் தான் அது சட்டமாக்கப்பட்டு, கொரோனா நிவாரணத்துக்கான நிதி ஒதுக்கப்படும்.

    ஆனால், இந்த மசோதாவில் அமெரிக்கர்களுக்கு குறைவான உதவியே கிடைக்கிப்பதாகவும், வெளிநாடுகளே அதிக பலனடைவதாகவும் கூறி மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க டிரம்ப் மறுத்து வருகிறார்.

    மேலும், கொரோனா நிவாரணமாக அமெரிக்கர்களுக்கு தலா 600 டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ 44 ஆயிரம்) வழங்கப்படும் என மசோதாவில் குறிப்பிடப்பட்டிருப்பதை 2 ஆயிரம்  டாலராக (சுமார் ரூ.1 லட்சத்து 47 ஆயிரம்) அதிகரிக்கும்படியும் டிரம்ப் அமெரிக்க நாடாளுமன்றத்திடம் வலியுறுத்தியுள்ளார். இதனால், கொரோனா நிவாரண மசோதா சட்டமாவதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது.

    இந்நிலையில், கொரோனா நிவாரண மசோதாவில் டிரம்ப் கையெழுத்திட மறுப்பதற்கு அமெரிக்க அதிபர் தேர்தல் வெற்றியாளர் ஜோ பைடன் கண்டனம் தெரிவித்துள்ளார். 

    மசோதாவில் டிரம்ப் கையெழுத்திடாமல் காலம் தாழ்த்துவது பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தும். இதன் மூலம் 1 கோடி அமெரிக்கர்கள் வேலையின்மை காப்பீடு பலன்களை இழக்க நேரிடும் எனவும் 
    பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார்
    Next Story
    ×