என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வியாழன்- சனி கோள்கள் அருகில் தோன்றிய வானியல் நிகழ்வு: செல்போன் மூலம் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களின் தொகுப்பு
Byமாலை மலர்22 Dec 2020 4:54 AM GMT (Updated: 22 Dec 2020 4:54 AM GMT)
800 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக வியாழன் மற்றும் சனி கோள்கள் நேற்று ஒரே நேர்க்கோட்டில் தோன்றின. இந்த வானியல் நிகழ்வு உலகின் பல நாடுகளில் தெரிந்தது.
வாஷிங்டன்:
800 ஆண்டுகளுக்கு பின் அரிய நிகழ்வாக சூரியனை சுற்றிவரும் வியாழன் மற்றும் சனி கோள்கள் வானில் ஒரே நேர்கோட்டில் காட்சியளிக்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. இதுபோன்ற அடுத்த வானியல் நிகழ்வு இனி 2418-ம் ஆண்டுதான் நடைபெறும் என்பதால் இந்த நிகழ்வை காண இந்தியா மட்டுமல்லாமல் உலகின் பல நாடுகளை சேர்ந்த மக்களும் மிகுந்த ஆர்வமடைந்தனர்.
தமிழகத்தில் இந்த நிகழ்வை பொதுமக்கள் நேரில் காண கோளரங்கங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கு சென்று மக்கள் இந்த வானியல் நிகழ்வை கண்டுகளித்தனர்.
800 ஆண்டுகளுக்கு பின் அரிய நிகழ்வாக சூரியனை சுற்றிவரும் வியாழன் மற்றும் சனி கோள்கள் வானில் ஒரே நேர்கோட்டில் காட்சியளிக்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. இதுபோன்ற அடுத்த வானியல் நிகழ்வு இனி 2418-ம் ஆண்டுதான் நடைபெறும் என்பதால் இந்த நிகழ்வை காண இந்தியா மட்டுமல்லாமல் உலகின் பல நாடுகளை சேர்ந்த மக்களும் மிகுந்த ஆர்வமடைந்தனர்.
தமிழகத்தில் இந்த நிகழ்வை பொதுமக்கள் நேரில் காண கோளரங்கங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கு சென்று மக்கள் இந்த வானியல் நிகழ்வை கண்டுகளித்தனர்.
இந்தியா மட்டுமல்லாமல் உலகின் பல நாடுகளில் இந்த வானியல் நிகழ்வு மக்கள் வெறும் கண்ணால் நேரடியாக பார்க்கும் வகையில் தெரிந்தது. அந்த வகையில் அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்திலும் இந்த வானியல் நிகழ்வு தெளிவாக தெரிந்தது. இந்த நிகழ்வை சிலர் தங்கள் செல்போனிலும் புகைப்படமாக எடுத்தனர்.
வானில் தோன்றும் சில அரிய நிகழ்வுகள் செல்போன் கேமராவில் புலப்படாது, ஆனால் இந்த நிகழ்வு செல்போன் கேமராவால் தெளிவாக போட்டோ எடுக்க முடிந்தது. இதனால் மக்கள் தங்களுடைய செல்போனில் ஆர்வமாக புகைப்படம் எடுத்துக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அவற்றில் சில புகைப்படங்கள்:-
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X