என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
விமானத்தில் கொரோனா அறிகுறியுடன் பயணி உயிரிழப்பு -சக பயணிகள் கொந்தளிப்பு
லாஸ்ஏஞ்சல்ஸ்:
அமெரிக்காவின் ஆர்லாண்டோ நகரில் இருந்து லாஸ் ஏஞ்சல்சுக்கு பயணிகள் விமான ஒன்று புறப்பட்டு சென்றது. அதில் பயணம் செய்த ஆண் பயணி ஒருவருக்கு திடீரென உடல் நிலை மோசமானது.
உடனடியாக விமானம் நியூஆர்லியன்சில் தரை இறக்கப்பட்டது. மருத்துவர்கள் பரிசோதித்தபோது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
அப்போது இறந்தவருடன் வந்திருந்த அவரது மனைவி, ‘கடந்த ஒரு வாரமாகவே கணவருக்கு கொரோனா அறிகுறிகள் இருந்தது’ என்று சக பயணிகளிடம் தெரிவித்தார்.
இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சக பயணிகள் கொந்தளித்தனர். கொரோனா தொற்று அறிகுறி உள்ள ஒருவரை பயணம் செய்ய எப்படி விமான நிறுவனம் அனுமதித்தது என்று ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து விமான நிறுவனம் கூறும்போது, ‘இறந்த நபர் பயணத்துக்கு முன்பு விமான நிலையத்தில் நிரப்பிய படிவத்தில் தனக்கு கொரோனா இருப்பதாகவோ, அறிகுறிகள் உள்ளதாகவோ தெரிவிக்கவில்லை என்று தெரிவித்து உள்ளது.
ஆனால் பயணம் செய்யும் முன்பு பயணியின் உடல்வெப்ப நிலையை ஊழியர்கள் சரியாக பரிசோதிக்கவில்லை என்று மற்ற பயணிகள் குற்றம்சாட்டி உள்ளனர்.
இதைத்தொடர்ந்து அந்த விமானத்தில் பயணம் செய்த 179 பயணிகளை தொடர்புகொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. விமான ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்