என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ரஷியாவில் முதியோர் காப்பகத்தில் பயங்கர தீ விபத்து - 11 பேர் உடல் கருகி பலி
Byமாலை மலர்15 Dec 2020 6:55 PM GMT (Updated: 15 Dec 2020 6:55 PM GMT)
ரஷியாவில் முதியோர் காப்பகத்தில் நிகழ்ந்த தீ விபத்தில் 4 மூதாட்டிகள் உள்பட 7 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
மாஸ்கோ:
ரஷியாவின் பாஷ்கோர்டோஸ்தான் பிராந்தியத்தில் உள்ள இஸ்புல்டினோ என்ற கிராமத்தில் முதியோர் காப்பகம் ஒன்று செயல்பட்டு வந்தது. மரத்தினால் ஆன கட்டிடத்தில் இயங்கி வந்த இந்த காப்பகத்தில் முதியவர்கள் 15 பேர் தங்கியிருந்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு இந்த காப்பகத்தில் திடீரென தீ பிடித்தது. மளமளவென பற்றி எரிந்த தீ கண்ணிமைக்கும் நேரத்தில் ஒட்டுமொத்த கட்டத்திலும் பரவியது.
இதனால் காப்பகத்தில் இருந்த முதியவர்கள் வெளியே வர முடியாமல் உள்ளே சிக்கிக் கொண்டனர். எனினும் காப்பக ஊழியர் உள்பட 4 பேர் அங்கிருந்து வெளியேறி உயிர் தப்பினர். அவர்கள் அளித்த தகவலின் பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
ஆனால் அதற்குள் 4 மூதாட்டிகள் உள்பட 7 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரஷியாவின் பாஷ்கோர்டோஸ்தான் பிராந்தியத்தில் உள்ள இஸ்புல்டினோ என்ற கிராமத்தில் முதியோர் காப்பகம் ஒன்று செயல்பட்டு வந்தது. மரத்தினால் ஆன கட்டிடத்தில் இயங்கி வந்த இந்த காப்பகத்தில் முதியவர்கள் 15 பேர் தங்கியிருந்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு இந்த காப்பகத்தில் திடீரென தீ பிடித்தது. மளமளவென பற்றி எரிந்த தீ கண்ணிமைக்கும் நேரத்தில் ஒட்டுமொத்த கட்டத்திலும் பரவியது.
இதனால் காப்பகத்தில் இருந்த முதியவர்கள் வெளியே வர முடியாமல் உள்ளே சிக்கிக் கொண்டனர். எனினும் காப்பக ஊழியர் உள்பட 4 பேர் அங்கிருந்து வெளியேறி உயிர் தப்பினர். அவர்கள் அளித்த தகவலின் பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
ஆனால் அதற்குள் 4 மூதாட்டிகள் உள்பட 7 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X