என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அமீரகத்தில் வெப்பநிலை குறைந்தது- அபுதாபி, துபாயில் கடும் பனி மூட்டம்
Byமாலை மலர்5 Dec 2020 3:48 AM GMT (Updated: 5 Dec 2020 3:48 AM GMT)
அமீரகத்தில் வெப்பநிலை குறைந்ததால், அபுதாபி, துபாய் உள்ளிட்ட பல இடங்களில் கடும் பனிமூட்டம் நிலவியது. மேலும் துபாயில் பல்வேறு இடங்களில் இன்று மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக அமீரக தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
துபாய்:
அமீரகத்தில் சமீப நாட்களாக குளிர்காலம் தொடங்கியுள்ளதால் வெப்பநிலை வெகுவாக குறைந்துள்ளது. இதில் பகல் நேரத்தில் கடந்த மாதத்தை விட வெப்பநிலை வெகுவாக குறைந்து வருகிறது. காற்றில் உள்ள ஈரப்பதத்தின் அளவும் குறைந்துள்ளது. பொதுவாக வெப்பநிலை அதிகபட்சமாக பகல் நேரங்களில் 30 டிகிரி செல்சியசுக்கும் குறைவாகவே காணப்பட்டது.
இதனை அடுத்து நேற்று காலை நேரத்தில் அபுதாபி மற்றும் துபாய் பகுதிகளில் கடுமையான பனிமூட்டம் ஏற்பட்டது. இதன் காரணமாக துபாயின் வானுயர்ந்த பல கட்டிடங்கள் பனிமூட்டத்தில் மறைந்தது போல் காணப்பட்டது. இந்த பனிமூட்டம் காலை 9 மணி வரை நீடித்தது.
அபுதாபியில் அல் அஜ்பான் மற்றும் மதினத் ஜாயித் ஆகிய இடங்களில் கடும் பனிமூட்டம் ஏற்பட்டது. துபாயில் ஷேக் ஜாயித் சாலை, இ-311 ஷேக் முகம்மது பின் ஜாயித் சாலை, எமிரேட்ஸ் சாலை மற்றும் இ-66 துபாய் அல் அய்ன் சாலை ஆகிய பகுதிகளில் பனிமூட்டம் அடர்த்தியாக வெகு நேரம் காணப்பட்டது. இதன் காரணமாக துபாய் போலீசார் சாலையில் செல்லும் வாகனங்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பை சமூக ஊடகங்களில் வெளியிட்டனர்.
அதேபோல் பல்வேறு சாலைகளில் எதிரில் வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு கடும் பனிமூட்டம் தென்பட்டது. இதனால் வாகனங்கள் சாலைகளில் வேகமாக செல்ல முடியாமல் திணறின. பல்வேறு சாலைகளில் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு வாகனங்கள் சென்ற காட்சியை காணமுடிந்தது. அந்த பகுதிகளில் பனிமூட்டம் காலை 9 மணி வரை நீடித்தது குறிப்பிடத்தக்கது.
பனிமூட்டம் காரணமாக சாலையில் முன்புறமாக 1 கி.மீ. தொலைவுக்கு பார்வைதிறன் குறையும் என அமீரக தேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், குறிப்பாக துபாய்-அபுதாபி செல்லும் வாகனங்கள் மிக கவனமாக செல்ல வேண்டும். முன்னால் செல்லும் வாகனங்களை கவனித்து தகுந்த இடைவெளியுடன் தங்கள் வாகனங்களை ஓட்டி செல்ல வேண்டும். இன்றும், நாளையும் இதேபோன்ற வானிலை அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் காணப்படும். அதுமட்டுமல்லாமல் இன்று (சனிக்கிழமை) துபாயில் பல்வேறு இடங்களில் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதால் சாலைகளை பயன்படுத்துவோர் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என கூறியுள்ளது.
அமீரகத்தில் சமீப நாட்களாக குளிர்காலம் தொடங்கியுள்ளதால் வெப்பநிலை வெகுவாக குறைந்துள்ளது. இதில் பகல் நேரத்தில் கடந்த மாதத்தை விட வெப்பநிலை வெகுவாக குறைந்து வருகிறது. காற்றில் உள்ள ஈரப்பதத்தின் அளவும் குறைந்துள்ளது. பொதுவாக வெப்பநிலை அதிகபட்சமாக பகல் நேரங்களில் 30 டிகிரி செல்சியசுக்கும் குறைவாகவே காணப்பட்டது.
இதனை அடுத்து நேற்று காலை நேரத்தில் அபுதாபி மற்றும் துபாய் பகுதிகளில் கடுமையான பனிமூட்டம் ஏற்பட்டது. இதன் காரணமாக துபாயின் வானுயர்ந்த பல கட்டிடங்கள் பனிமூட்டத்தில் மறைந்தது போல் காணப்பட்டது. இந்த பனிமூட்டம் காலை 9 மணி வரை நீடித்தது.
அபுதாபியில் அல் அஜ்பான் மற்றும் மதினத் ஜாயித் ஆகிய இடங்களில் கடும் பனிமூட்டம் ஏற்பட்டது. துபாயில் ஷேக் ஜாயித் சாலை, இ-311 ஷேக் முகம்மது பின் ஜாயித் சாலை, எமிரேட்ஸ் சாலை மற்றும் இ-66 துபாய் அல் அய்ன் சாலை ஆகிய பகுதிகளில் பனிமூட்டம் அடர்த்தியாக வெகு நேரம் காணப்பட்டது. இதன் காரணமாக துபாய் போலீசார் சாலையில் செல்லும் வாகனங்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பை சமூக ஊடகங்களில் வெளியிட்டனர்.
அதேபோல் பல்வேறு சாலைகளில் எதிரில் வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு கடும் பனிமூட்டம் தென்பட்டது. இதனால் வாகனங்கள் சாலைகளில் வேகமாக செல்ல முடியாமல் திணறின. பல்வேறு சாலைகளில் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு வாகனங்கள் சென்ற காட்சியை காணமுடிந்தது. அந்த பகுதிகளில் பனிமூட்டம் காலை 9 மணி வரை நீடித்தது குறிப்பிடத்தக்கது.
பனிமூட்டம் காரணமாக சாலையில் முன்புறமாக 1 கி.மீ. தொலைவுக்கு பார்வைதிறன் குறையும் என அமீரக தேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், குறிப்பாக துபாய்-அபுதாபி செல்லும் வாகனங்கள் மிக கவனமாக செல்ல வேண்டும். முன்னால் செல்லும் வாகனங்களை கவனித்து தகுந்த இடைவெளியுடன் தங்கள் வாகனங்களை ஓட்டி செல்ல வேண்டும். இன்றும், நாளையும் இதேபோன்ற வானிலை அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் காணப்படும். அதுமட்டுமல்லாமல் இன்று (சனிக்கிழமை) துபாயில் பல்வேறு இடங்களில் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதால் சாலைகளை பயன்படுத்துவோர் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என கூறியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X