என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளியாக அறிவிப்பு
Byமாலை மலர்3 Dec 2020 1:18 AM GMT (Updated: 3 Dec 2020 1:18 AM GMT)
ஊழல் வழக்குகள் தொடர்பாக பலமுறை சம்மன் அனுப்பியும் நேரில் ஆஜராகாததால் நவாஸ் ஷெரிப்பை பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளியாக நீதிபதிகள் அறிவித்தனர்.
இஸ்லாமாபாத்:
‘பனாமா கேட்’ ஊழல் வழக்கில் பதவி நீக்கம் செய்யப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு அல் அஜிசியா ஊழல் வழக்கில் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
அதன் பின்னர் சிறையில் அடைக்கப்பட்ட அவர் உடல் நிலையை காரணம் காட்டி கோர்ட்டில் ஜாமீன் பெற்று சிகிச்சைக்காக லண்டன் சென்றார். ஆனால் ஜாமீன் காலம் முடிந்த பிறகும் அவர் பாகிஸ்தான் திரும்பாமல் லண்டனிலேயே தங்கியுள்ளார்.
இதனிடையே அல் அஜிசியா மற்றும் ஆவென் பீல்டு ஊழல் வழக்குகளில் விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி இஸ்லாமாபாத் ஐகோர்ட்டு நவாஸ் ஷெரீப்புக்கு பலமுறை சம்மன் அனுப்பியது. ஆனால் இதுவரை அவர் கோர்ட்டில் ஆஜராகவில்லை.
இந்த நிலையில் இந்த ஊழல் வழக்குகள் நீதிபதிகள் அமீர் பாரூக் மற்றும் மோசின் அக்தர் ஆகியோர் முன்னிலையில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், ஊழல் வழக்குகள் தொடர்பாக பலமுறை சம்மன் அனுப்பியும் நேரில் ஆஜராகாததால் நவாஸ் ஷெரிப்பை பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளியாக அறிவித்தனர்.
‘பனாமா கேட்’ ஊழல் வழக்கில் பதவி நீக்கம் செய்யப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு அல் அஜிசியா ஊழல் வழக்கில் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
அதன் பின்னர் சிறையில் அடைக்கப்பட்ட அவர் உடல் நிலையை காரணம் காட்டி கோர்ட்டில் ஜாமீன் பெற்று சிகிச்சைக்காக லண்டன் சென்றார். ஆனால் ஜாமீன் காலம் முடிந்த பிறகும் அவர் பாகிஸ்தான் திரும்பாமல் லண்டனிலேயே தங்கியுள்ளார்.
இதனிடையே அல் அஜிசியா மற்றும் ஆவென் பீல்டு ஊழல் வழக்குகளில் விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி இஸ்லாமாபாத் ஐகோர்ட்டு நவாஸ் ஷெரீப்புக்கு பலமுறை சம்மன் அனுப்பியது. ஆனால் இதுவரை அவர் கோர்ட்டில் ஆஜராகவில்லை.
இந்த நிலையில் இந்த ஊழல் வழக்குகள் நீதிபதிகள் அமீர் பாரூக் மற்றும் மோசின் அக்தர் ஆகியோர் முன்னிலையில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், ஊழல் வழக்குகள் தொடர்பாக பலமுறை சம்மன் அனுப்பியும் நேரில் ஆஜராகாததால் நவாஸ் ஷெரிப்பை பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளியாக அறிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X