search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    கொரோனா தடுப்பூசிகள் குற்றவாளிகள் கும்பலால் குறிவைக்கப்படலாம் - இன்டர்போல் எச்சரிக்கை

    பைசர் உள்பட கொரோனா தடுப்பூசிகள் குற்றவாளிகள் கும்பல்களால் குறிவைக்கப்படலாம் என உலகநாடுகளுக்கு இன்டர்போல் எச்சரிக்கை விடுத்துள்ளது.
    பாரிஸ்:

    சீனாவில் உருவான கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் அதிக செயல்திறன்கொண்ட தடுப்பூசிகள் அடுத்தடுத்து கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. 

    குறிப்பாக அமெரிக்காவின் பைசர் நிறுவனும் ஜெர்மனியின் பயோஎன்டெக் நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசி 95 சதவிகிதம் செயல்திறன் கொண்டது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    அந்த தடுப்பூசியை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர இங்கிலாந்து அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி இங்கிலாந்தில் அடுத்த வாரம் பயன்பாட்டிற்கு வர உள்ளது. 

    உலக அளவில் கொரோனா தடுப்பூசியை அதிகாரப்பூர்வமாக மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவந்த பெருமையை இங்கிலாந்து பெற்றுள்ளது.

    அதேபோல், அமெரிக்காவின் மாடர்னா இங்க் நிறுவனமும் கொரோனா தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. அந்த தடுப்பூசியின் செயல்திறன்ன் 94.1 சதவிகிதம் என்ற அளவில் உள்ளது. இந்த தடுப்பூசியும் இன்னும் சில நாட்களில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

    இந்நிலையில், கொரோனா தடுப்பூசிகள் சர்வதேச குற்றவாளிகள் கும்பல்களால் குறிவைக்கப்படலாம் என சர்வதேச போலீஸ் (இன்டர்போல்) உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இது தொடர்பாக இன்டர்போல் அமைப்பின் பொதுச்செயலாளர் ஜூவர்ஜின் ஸ்டாகாக் கூறியதாவது:-

    கொரோனா வைரசுக்கான தடுப்பூசியை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அரசாங்கங்கள் தீவிர நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், இந்த நடவடிக்கைகளில் நுழைந்து தடுப்பூசி விநியோக சங்கிலியை சீர்குலைக்க திட்டமிடுகின்றனர். 

    இந்த குற்றவாளிகள் கும்பல் பொலியான இணையதள பக்கங்கள் மூலமாகவும், போலியான இணையதள பக்கங்கள் மூலமாகவும் பொதுமக்களை குறிவைக்கின்றனர். இது பொதுமக்களின் உடல்நலத்துக்கு மட்டுமல்லாமல் உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்தும்.

    என்றார்.
    Next Story
    ×