என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனாவை கட்டுப்படுத்த 100 சதவீதம் செயல் திறனுடைய தடுப்பூசி தயார் - மாடர்னா நிறுவனம்
Byமாலை மலர்30 Nov 2020 10:18 PM GMT (Updated: 30 Nov 2020 11:18 PM GMT)
கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் 100 சதவீதம் செயல் திறனுடைய தடுப்பூசி தயார் என அமெரிக்காவின் மாடர்னா நிறுவனம் அறிவித்துள்ளது.
வாஷிங்டன்:
கொரோனா வைரசை கட்டுப்படுத்த தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் உலகின் பல்வேறு நாடுகள் ஈடுபட்டுள்ளன.
ரஷியா, அமெரிக்கா, சீனா, இங்கிலாந்து போன்ற நாடுகள் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் போட்டியில் முன்னிலையில் உள்ளன.
அந்த வகையில் அமெரிக்காவின் மாடர்னா என்ற மருந்து நிறுவனம் கொரோனா தடுப்பூசியை தயாரித்துள்ளது. இந்த தடுப்பூசி மனிதர்களிடம் இறுதிக்கட்ட பரிசோதனையில் உள்ளது.
இந்நிலையில், தங்களது தடுப்பூசி கொரோனா வைரஸ் பாதிப்பு மிகவும் தீவிரமாக உள்ள நபர்களிடம் 100 சதவிகிதம் செயல்திறன் கொண்டது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாடர்னா நிறுவனம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக, மாடர்னா நிறுவனத்தின் தலைமை மருத்துவ அதிகாரி தால் ஜாக்ஸ் கூறுகையில், “எங்களிடம் மிகவும் பயனுள்ள ஒரு தடுப்பூசி இருப்பதாக நாங்கள் நம்புகிறோம். அதை நிரூபிப்பதற்கான தரவு இப்போது எங்களிடம் உள்ளது. இந்த தொற்றுத்நோயை திருப்புவதில் எங்கள் தடுப்பூசி முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்” என தெரிவித்தார்.
இதையடுத்து தங்களது தடுப்பூசியை அவசர தேவைக்கு பயன்படுத்த அனுமதியளிக்குமாறு அமெரிக்கா உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிறுவனத்திடமும் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் சுகாதாரத் துறையிடமும் மாடர்னா நிறுவனம் அனுமதி கோரியுள்ளது.
ஏற்கனவே ஜெர்மனியின் பயோன்டெக் நிறுவனத்துடன் இணைந்து கொரோனா தடுப்பூசியை தயாரித்துள்ள அமெரிக்காவின் பைசர் நிறுவனம் தங்களது தடுப்பூசி கொரோனாவை ஒழிப்பதில் 95 சதவீதம் திறன் வாய்ந்தது என அறிவித்து அதை அவசர தேவைக்கு பயன்படுத்த அனுமதி கோரியிருப்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X