search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிகிச்சையை விளக்கும் மருத்துவர்
    X
    சிகிச்சையை விளக்கும் மருத்துவர்

    பிரேசிலை விடாத கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 62 லட்சத்தை கடந்தது

    பிரேசில் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 62 லட்சத்தைக் கடந்துள்ளது.
    ரியோ டி ஜெனிரோ:

    கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.

    அமெரிக்காவை தொடர்ந்து இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. பிரேசில் 3-ம் இடத்தில் உள்ளது.

    பிரேசில் நாட்டில் கொரோனாவின் தாக்கம் வேகமாக அதிகரித்து வருகிறது. நேற்று 37,692 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், அங்கு கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 62 லட்சத்தைக் கடந்துள்ளது.

    தற்போதைய நிலவரப்படி அங்கு கொரோனா வைரசுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 71 ஆயிரத்து 497 ஆக உள்ளது. மேலும், கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 55.28 லட்சத்தைக் கடந்துள்ளது. சுமார் 5 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    Next Story
    ×