என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அமெரிக்காவை அதிரவைக்கும் கொரோனா - ஒரே நாளில் 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழப்பு
Byமாலை மலர்25 Nov 2020 12:16 AM GMT (Updated: 25 Nov 2020 12:16 AM GMT)
அமெரிக்காவில் ஒரே நாளில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆயிரத்தைக் கடந்துள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
வாஷிங்டன்:
உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. வைரஸ் பாதிப்பில் இருந்து மீள முடியாமல் அந்த நாடு தத்தளித்து வருகிறது.
அமெரிக்காவில் தினசரி கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
கடந்த இரு வாரங்களாக தினமும் 1 லட்சம் முதல் 2 லட்சம் வரையிலான நபர்களுக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அமெரிக்காவில் ஒரே நாளில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆயிரத்தைக் கடந்துள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதன்மூலம் அங்கு பலியானோர் எண்ணிக்கை 2 லட்சத்து 65 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
மேலும், கொரோனாவால் 1.65 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு அடைந்துள்ளனர். இதனால் அங்கு பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.30 கோடியை நெருங்கியுள்ளது.
கொரோனாவில் இருந்து 76 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X