என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அமெரிக்காவில் ஒரே நாளில் 1 லட்சத்து 89 ஆயிரம் பேருக்கு கொரோனா
Byமாலை மலர்21 Nov 2020 7:02 PM GMT (Updated: 21 Nov 2020 7:02 PM GMT)
அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 1 லட்சத்து 89 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு புதிதாக வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வாஷிங்டன்:
உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடான அமெரிக்கா கொலைகார கொரோனா வைரசின் கோரப்பிடியில் சிக்கி திணறி வருகிறது.
இந்த நிலையில் அமெரிக்காவில் தற்போது கொரோனா வைரசின் 2-வது அலை தீவிரமாக இருந்து வருகிறது. அங்கு கடந்த சில தினங்களாக ஜெட் வேகத்தில் கொரோனா தொற்று பரவி வருகிறது. இந்த நிலையில் அமெரிக்காவில் தினசரி கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 1 லட்சத்து 89 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு புதிதாக வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதே நிலை நீடித்தால் இன்னும் ஓரிரு நாட்களில் அமெரிக்காவில் தினசரி கொரோனா பாதிப்பு 2 லட்சத்தை எட்டும். அமெரிக்காவில் மொத்த கொரோனா பாதிப்பு 1 கோடியே 22 லட்சத்தை கடந்து சென்றுகொண்டிருக்கிறது. அதேபோல் அங்கு கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ளது.
உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடான அமெரிக்கா கொலைகார கொரோனா வைரசின் கோரப்பிடியில் சிக்கி திணறி வருகிறது.
இந்த நிலையில் அமெரிக்காவில் தற்போது கொரோனா வைரசின் 2-வது அலை தீவிரமாக இருந்து வருகிறது. அங்கு கடந்த சில தினங்களாக ஜெட் வேகத்தில் கொரோனா தொற்று பரவி வருகிறது. இந்த நிலையில் அமெரிக்காவில் தினசரி கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 1 லட்சத்து 89 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு புதிதாக வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதே நிலை நீடித்தால் இன்னும் ஓரிரு நாட்களில் அமெரிக்காவில் தினசரி கொரோனா பாதிப்பு 2 லட்சத்தை எட்டும். அமெரிக்காவில் மொத்த கொரோனா பாதிப்பு 1 கோடியே 22 லட்சத்தை கடந்து சென்றுகொண்டிருக்கிறது. அதேபோல் அங்கு கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X