என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ரஷ்யாவில் ஒரே நாளில் 23,610 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
Byமாலை மலர்19 Nov 2020 12:01 PM GMT (Updated: 19 Nov 2020 12:01 PM GMT)
ரஷ்யாவில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக ஒரே நாளில் 23,610 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாஸ்கோ:
கொரோனாவால் பாதிக்கப்பட்ட உலக நாடுகளின் பட்டியலில் ரஷ்யா 5-வது இடத்தில் உள்ளது. ரஷ்யாவில் இன்றைய நிலவரப்படி, இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 லட்சத்தைக் கடந்துள்ளது.
ரஷ்ய அரசு வெளியிட்டுள்ள தகவலின்படி, அங்கு இன்று ஒரே நாளில் 23,610 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ரஷ்யாவில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 20,15,608 ஆக அதிகரித்துள்ளது. ரஷ்யாவில் இதுவரை பதிவானதிலேயே அதிகபட்ச பாதிப்பாக இது அமைந்துள்ளது.
அதேசமயம் கொரோனா பாதிப்பால் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 463 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 34,850ஆக உயர்ந்துள்ளது. மேலும் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 25,573 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.
ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் 6,438 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அங்கு தொற்று பரவல் மிக தீவிரமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரஷ்யாவில் அரசு அதிகாரிகள் அதிக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X