search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    பாகிஸ்தானில் கால்வாய்க்குள் வேன் கவிழ்ந்து 20 பேர் உயிரிழப்பு

    பாகிஸ்தானில் கால்வாய்க்குள் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 பேரை மட்டுமே உயிருடன் மீட்க முடிந்தது. பெண்கள், சிறுவர்கள் உட்பட 20 பேர் பிணமாக மீட்கப்பட்டனர்.
    பெஷாவர்:

    பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் உள்ள கைபர் பக்துங்வா மாகாணம் தேரா இஸ்மாயில் கான் மாவட்டத்தில் திருமண நிகழ்ச்சி நடந்தது. உள்ளூரை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் இந்த திருமணத்தில் பங்கேற்று விட்டு வேன் ஒன்றில் தங்கள் வீடுகளுக்கு திரும்பி கொண்டிருந்தனர்.இந்த வேன் சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் தறிகெட்டு ஓடிய வேன் சாலையோரம் உள்ள கால்வாயில் தலைகுப்புற கவிழ்ந்தது.

    இதில் வேனில் இருந்த அனைவரும் கால்வாய்க்குள் மூழ்கினர்.உடனடியாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். எனினும் 3 பேரை மட்டுமே உயிருடன் மீட்க முடிந்தது. பெண்கள், சிறுவர்கள் உட்பட 20 பேர் பிணமாக மீட்கப்பட்டனர்.

    விபத்துக்கான காரணம் என்ன உடனடியாக தெரியவரவில்லை. இதுகுறித்து தீவிர விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
    Next Story
    ×