என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அமெரிக்க அதிபர் தேர்தல் - டிரம்ப் மனைவி மெலனியா புளோரிடாவில் வாக்களித்தார்
Byமாலை மலர்3 Nov 2020 5:44 PM GMT (Updated: 3 Nov 2020 5:44 PM GMT)
அமெரிக்க அதிபர் டிரம்பின் மனைவி மெலனியா புளோரிடாவில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கைப் பதிவு செய்தார்.
வாஷிங்டன்:
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக டொனால்டு டிரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பிடனும் போட்டியிடுகின்றனர். அதேபோல் துணை அதிபர் வேட்பாளர்களாக குடியரசு கட்சியின் மைக் பென்ஸ் மற்றும் ஜனநாயக கட்சி சார்பில் இந்திய வம்சாவளியான கமலா ஹாரிஸ் களமிறங்கியுள்ளனர்.
அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று (நவம்பர் 3) தொடங்கியுள்ளது. 3-ம் தேதி தொடங்கிய உடனேயே வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
அந்நாட்டின் நியூ ஹான்ஸ்ரின் மாகாணம் டிஸ்க்விலி நாட்ச் பகுதியினர் அதிபர் தேர்தலின் முதல் வாக்குகளை பதிவு செய்தனர். அங்கு பதிவான 5 வாக்குகளும் உடனடியாக எண்ணப்பட்டது. அதில் 5 வாக்குகளையும் பெற்று ஜோ பிடன் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.
அமெரிக்காவில் தேர்தல் தேதிக்கு முன் வாக்களிப்பதற்கு வசதி உள்ளது. அந்த வகையில், 9 கோடியே 50 லட்சத்து 27 ஆயிரத்து 832 அமெரிக்கர்கள் தேர்தலுக்கு முன்பே வாக்களித்துள்ளனர்.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்பின் மனைவி மெலனியா புளோரிடாவில் உள்ள வாக்குச்சாவடிக்கு வந்து தனது வாக்கைப் பதிவு செய்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X