என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பிரான்சில் கிரேக்க பாதிரியார் மீது துப்பாக்கிச் சூடு
Byமாலை மலர்31 Oct 2020 10:31 PM GMT (Updated: 31 Oct 2020 10:31 PM GMT)
பிரான்சில் கிரேக்க பாதிரியாரை அடையாளம் தெரியாத நபர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
பாரிஸ்:
பிரான்ஸ் நாட்டில் உள்ள லயான் நகரத்தில் உள்ள தேவாலயத்தில் கிரேக்க நாட்டைச் சேர்ந்த பாதிரியார் ஒருவர் அடையாளம் தெரியாத நபரால் துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளார்.
தேவாலயத்தை மூடும் பணியில் பாதிரியார் ஈடுபட்டிருந்த போது, அங்கு வந்த நபர் பாதிரியாரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். அடிவயிற்றில் 2 குண்டுகள் பாய்ந்ததால், உயிருக்கு ஆபத்தான நிலையில் பாதிரியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
துப்பாக்கியால் சுட்ட நபரை நேரில் பார்த்தவர்கள் கூறிய அடையாளங்களை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த தாக்குதலுக்கான காரணம் குறித்து தெளிவான தகவல் கிடைக்கவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே, கடந்த 29-ம் தேதி பிரான்ஸ் நாட்டின் நைஸ் நகரில் உள்ள தேவாலயத்தில் 3 பேர் கழுத்து அறுத்து கொல்லப்பட்டது நினைவிருக்கலாம்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X