search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா பரிசோதனை
    X
    கொரோனா பரிசோதனை

    பிரான்சில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா - ஒரே நாளில் 45 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு

    பிரான்ஸ் நாட்டில் மேலும் 45 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அங்கு பாதிப்பு எண்ணிக்கை 10.86 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
    பாரிஸ்:

    சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 210 நாடுகளுக்கும் மேல் பரவியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. 

    உலக அளவில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன.

    கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் அர்ஜெண்டினாவை பின்னுக்கு தள்ளி பிரான்ஸ் 6-வது இடத்தில் உள்ளது.
     
    இந்நிலையில், பிரான்ஸ் நாட்டில் மேலும் 45,422 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் அங்கு வைரஸ் தாக்குதலுக்கு பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 10 லட்சத்து 86 ஆயிரத்து 497 ஆக அதிகரித்துள்ளது.

    கொரோனாவால் அந்நாட்டில் 137 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அங்கு கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 34 ஆயிரத்து 645 ஆக அதிகரித்துள்ளது.

    கொரோனாவில் இருந்து சுமார் 1.09 லட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர் என அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
    Next Story
    ×