என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆப்கானிஸ்தான்: தலிபான்கள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 13 பேர் பலி
Byமாலை மலர்24 Oct 2020 3:18 PM GMT (Updated: 24 Oct 2020 3:18 PM GMT)
ஆப்கானிஸ்தானில் கல்வி மையத்தை குறிவைத்து தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 13 பேர் உயிரிழந்தனர்.
காபுல்:
ஆப்கானிஸ்தானின் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் அரசுப்படைகளுக்கும் இடையே 19 ஆண்டுகளாக உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. இந்த உள்நாட்டு போரில் ஆப்கானிஸ்தான் அரசுக்கு அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் ஆதரவு அளித்து வருகின்றன. ஆனாலும் போரை முடிவுக்கு கொண்டுவர தலிபான்கள் - அமெரிக்கா இடையே உடன்படிக்கை செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, கத்தார் தலைநகர் தோகாவில் தலிபான்களுக்கும் ஆப்கானிஸ்தான் அரசுக்கும் இடையே தற்போது பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டு பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் உள்நாட்டு சண்டை முடிவுக்கு கொண்டுவர தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அமைதி பேச்சுவார்த்தை ஒரு பக்கம் நடைபெற்று வந்தாலும் வந்தாலும் தலிபான் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானில் தங்கள் தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில், அந்நாட்டின் நகர்ஹர் மாகாணம் ஷிர்ஷத் மாவட்டம் ஹாசிம் ஹேல் பகுதியில் உள்ள சோதனைச்சாவடியில் இன்று காலை பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அங்குவந்த தலிபான் பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி தாக்குதல் நடத்தினர்.
பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு பாதுகாப்பு படையினர் தக்கபதிலடி கொடுத்தனர். பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 33 தலிபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், காபுல் நகரில் உள்ள புல்-இ-கஹோக் என்ற பகுதியில் உள்ள கல்வி மையம் அருகே இன்று மாலை தனது உடலில் வெடிகுண்டுகளை நிரப்பிவந்த நபர் அந்த வெடிகுண்டுகளை திடீரென வெடிக்கச்செய்தான்.
இந்த தற்கொலைப்படை தாக்குதலில் குழந்தைகள் உள்பட 13 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். 30-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். தாக்குதல் நடத்திய நபர் பாதுகாப்புபடையில் பணியாற்றியதும் அவர் தலிபான் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயல்பட்டது தெரியவந்துள்ளது.
அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வரும் சம்பவம் அமைதியை சீர்குலைக்கும் நடவடிக்கையாகவே கருத்தப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X