என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனா பாதிப்பால் அமெரிக்காவில் பிப்ரவரிக்குள் 5 லட்சம் பேர் பலியாக கூடும் - ஆய்வு முடிவு
Byமாலை மலர்23 Oct 2020 9:55 PM GMT (Updated: 23 Oct 2020 10:20 PM GMT)
அமெரிக்காவில் ஒவ்வொருவரும் முக கவசங்கள் அணிவதன் வழியே 1.3 லட்சம் உயிர்களை பாதுகாக்கலாம் என்று ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது.
லண்டன்:
அமெரிக்காவில் கொரோனா பாதிப்புகளால் வரும் பிப்ரிவரி இறுதிக்குள் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்படக்கூடும் என்று ஆய்வு மதிப்பீடு ஒன்ற தெரிவிக்கிறது.
அமெரிக்கா வல்லரசு நாடுகளில் ஒன்றாக இருந்தபோதிலும், உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா பாதிப்புகளில் இருந்து தப்பவில்லை. அந்நாட்டில் கொரோனா பாதிப்புகள் மற்றும் பலி எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதனால் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் உலக அளவில் முதல் இடம் பிடித்துள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் கொரோனா தொற்றை கையாண்ட விதம் வரும் அதிபர் தேர்தலில் எதிரொலிக்கும் என கூறப்படுகிறது.
அமெரிக்காவில் இதுவரை 2.21 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால் அமெரிக்கர்களில் பலர் கொரோனா நெருக்கடியை கையாள்வதில் டிரம்பிற்கு பதிலாக ஜோ பிடன் மீது அதிக நம்பிக்கை கொண்டுள்ளனர் எனவும் கூறப்படுகிறது.
அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனா தடுப்பு மருந்து கண்டறிவதற்கான பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனாலும், இதன் முடிவுகள் முழு பலனளிக்கும் வகையில் இன்னும் வெளிவரவில்லை.
இந்நிலையில், அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீடுகளுக்கான மையத்தின் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில், குறைந்த அளவிலான கொரோனா திறன் சிகிச்சை முறைகள் மற்றும் தடுப்பு மருந்துகளில்லா நிலையில், குளிர்காலத்தில் பொது சுகாதாரத்திற்கு சவாலாக தொடரும் கொரோனா பாதிப்புகளை அமெரிக்கா எதிர்கொள்ள வேண்டும்.
பெரிய அளவில் பாதிப்புகள் சரிவை நோக்கிச் சென்றாலும், குளிர்காலத்தில் உயரும் நிலை ஏற்படும். தொற்று விகிதம் மற்றும் மரணங்கள் ஆகியவற்றின் உயர்வு காணப்படும் சூழலில், கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது என்பதில் அடிப்படை இல்லை. அது உண்மை என நாங்கள் நம்பவுமில்லை.
அமெரிக்காவில் அடுத்த ஆண்டு பிப்ரிவரி இறுதிக்குள் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்படக்கூடும். ஆனால், ஒவ்வொருவரும் முக கவசங்கள் அணிவதன் வழியே 1.3 லட்சம் உயிர்களைப் பாதுகாக்கலாம் என ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X