என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் திடீர் தாக்குதல்- 20 ராணுவ வீரர்கள் பலி
Byமாலை மலர்23 Oct 2020 8:15 AM GMT (Updated: 23 Oct 2020 8:15 AM GMT)
ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் ராணுவ வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர்.
காபூல்:
ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு எதிராக ராணுவம் தீவிர நடவடிக்கை எடுத்துவருகிறது. இதனால் ராணுவம் மற்றும் காவல்துறையை குறிவைத்து தலிபான்கள் தொடர்ந்து தாக்குதல்களை நடத்துகின்றனர்.
வன்முறை தாக்குதலை குறைப்பதுடன் அமைதி ஒப்பந்தம் செய்ய வேண்டும் என சர்வதேச சமூகமும், ஆப்கானிஸ்தான் மக்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அமைதி ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில் வன்முறையும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், நிம்ரோஸ் மாகாணத்தின் காஷ்ராட் மாவட்டத்தில் நேற்று மாலை ராணுவத்தை குறிவைத்து தலிபான்கள் தாக்குதல் நடத்தினர். சோதனைச்சாவடி மீது நடத்தப்பட்ட இந்த திடீர் தாக்குதலில் 20 வீரர்கள் உயிரிழந்ததாக மாவட்ட ஆளுநர் தெரிவித்துள்ளார். மேலும் 6 பேரை தலிபான்கள் சிறைப்பிடித்து சென்றதாகவும் அவர் கூறினார்.
புதன்கிழமை இரவு தலிபான்களை குறிவைத்து தக்கார் மாகாணத்தில் நடத்தப்பட்ட ராணுவ தாக்குதலில் 12 தலிபான்கள் கொல்லப்பட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X