என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
துபாயில், வீட்டு குளியலறையில் புகுந்த ‘குருட்டு பாம்பு’
Byமாலை மலர்22 Oct 2020 3:00 AM GMT (Updated: 22 Oct 2020 3:00 AM GMT)
துபாயில், வீட்டு குளியலறையில் புகுந்த ‘குருட்டு பாம்பு’ வகை ஆபத்தில்லாதவை என நிபுணர் தெரிவித்துள்ளார்.
துபாய்:
அமீரகத்தை பொறுத்தவரையில் குடியிருப்பு பகுதிகளில் மற்ற நாடுகளை போல் விஷப்பூச்சிகள் மற்றும் பாம்புகளை காண்பது அரிதாகும். பாலைவனம் மற்றும் வனப்பகுதிகளிலேயே இதுபோன்ற உயிரினங்கள் அதிக அளவில் வசித்து வருகின்றன.
துபாயின் அல் புர்ஜான் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வரும் இந்தியர் சுனில் சவுத்ரி. சமீபத்தில் இவரது வீட்டில் தோட்டம் அமைக்க வெளியிடத்தில் இருந்து மண்கொண்டு வரப்பட்டு கொட்டப்பட்டது. அப்போது இவரது வீட்டு குளியலறையில் கருப்பு நிறத்தில் பாம்பு இருந்துள்ளது.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவரின் குடும்பத்தினர் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்றனர். பின்னர், அந்த பாம்பு ஆபத்தில்லாதது என இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொண்ட அவர், பாம்பை தானே எடுத்து சென்று குடியிருப்பு பகுதிகளுக்கு அப்பால் விட்டு வந்துள்ளார். அந்த பாம்பின் புகைப்படத்தை தோட்டக்காரரிடம் காட்டியபோது அதுபோன்ற பாம்பு நீச்சல் குளம் அருகில் பார்த்ததாக கூறியுள்ளார்.
இந்த பாம்பு குறித்து துபாயில் உள்ள பூச்சிக்கட்டுப்பாட்டு நிறுவனத்தின் சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் நிபுணர் தினேஷ் ராமச்சந்திரன் கூறும்போது, “இது ‘குருட்டு பாம்பு’ எனப்படும் புழு வகையை சேர்ந்தது. இந்த வகை பாம்புகள் மண்ணுக்கடியில் அல்லது செடிகளில் காணப்படும். இந்த வகை பாம்புகள் மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்காது. வீட்டில் கண்டால் யாரும் அச்சமடைய தேவையில்லை. அமீரகத்தின் மண்பரப்பில் சாதாரணமாக காணக்கூடியவை” என விளக்கம் அளித்தார்.
அமீரகத்தை பொறுத்தவரையில் குடியிருப்பு பகுதிகளில் மற்ற நாடுகளை போல் விஷப்பூச்சிகள் மற்றும் பாம்புகளை காண்பது அரிதாகும். பாலைவனம் மற்றும் வனப்பகுதிகளிலேயே இதுபோன்ற உயிரினங்கள் அதிக அளவில் வசித்து வருகின்றன.
துபாயின் அல் புர்ஜான் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வரும் இந்தியர் சுனில் சவுத்ரி. சமீபத்தில் இவரது வீட்டில் தோட்டம் அமைக்க வெளியிடத்தில் இருந்து மண்கொண்டு வரப்பட்டு கொட்டப்பட்டது. அப்போது இவரது வீட்டு குளியலறையில் கருப்பு நிறத்தில் பாம்பு இருந்துள்ளது.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவரின் குடும்பத்தினர் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்றனர். பின்னர், அந்த பாம்பு ஆபத்தில்லாதது என இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொண்ட அவர், பாம்பை தானே எடுத்து சென்று குடியிருப்பு பகுதிகளுக்கு அப்பால் விட்டு வந்துள்ளார். அந்த பாம்பின் புகைப்படத்தை தோட்டக்காரரிடம் காட்டியபோது அதுபோன்ற பாம்பு நீச்சல் குளம் அருகில் பார்த்ததாக கூறியுள்ளார்.
இந்த பாம்பு குறித்து துபாயில் உள்ள பூச்சிக்கட்டுப்பாட்டு நிறுவனத்தின் சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் நிபுணர் தினேஷ் ராமச்சந்திரன் கூறும்போது, “இது ‘குருட்டு பாம்பு’ எனப்படும் புழு வகையை சேர்ந்தது. இந்த வகை பாம்புகள் மண்ணுக்கடியில் அல்லது செடிகளில் காணப்படும். இந்த வகை பாம்புகள் மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்காது. வீட்டில் கண்டால் யாரும் அச்சமடைய தேவையில்லை. அமீரகத்தின் மண்பரப்பில் சாதாரணமாக காணக்கூடியவை” என விளக்கம் அளித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X