search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3 கோடியாக உயர்வு

    உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3 கோடியாக அதிகரித்துள்ளது.
    ஜெனீவா:

    சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 215 நாடுகள்/ பிரதேசங்களுக்கு பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

    இந்த கொடிய வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் இறுதிகட்டத்தை விஞ்ஞானிகள் எட்டியுள்ளனர்.

    தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் இறுதி கட்ட முயற்சிகள் ஒரு பக்கம் நடைபெற்று வந்தாலும் மருத்துவத்துறையினரின் தன்னலமற்ற சேவையால் வைரஸ் பாதிப்பில் இருந்து பலர் மீண்டு வந்த வண்ணம் உள்ளனர்.

    இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3 கோடியை கடந்துள்ளது. குறிப்பாக இந்திய அரசு நேற்று வெளியிட்ட தகவலில் கடந்த 24 மணி நேரத்தில் 61 ஆயிரத்து 775 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். 

    தற்போதைய நிலவரப்படி, 4 கோடியே 14 லட்சத்து 58 ஆயிரத்து 967 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  

    வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 94 லட்சத்து 36 ஆயிரத்து 214 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 74 ஆயிரத்து 78 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.

    கொரோனா தாக்குதலுக்கு இதுவரை 11 லட்சத்து 35 ஆயிரத்து 638 பேர் உயிரிழந்துள்ளனர்.

    ஆனாலும், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து இதுவரை 3 கோடியே 8 லட்சத்து 87 ஆயிரத்து 115 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

    கொரோனாவில் இருந்து அதிக எண்ணிக்கையில் குணமடைந்தவர்களை கொண்ட நாடுகள்:-

    இந்தியா - 67,95,103
    அமெரிக்கா - 55,86,285
    பிரேசில் - 47,56,489
    ரஷியா - 10,96,560
    கொலம்பியா - 8,84,8895
    அர்ஜெண்டினா - 8,40,520
    பெரு - 7,92,892
    தென் ஆப்ரிக்கா - 6,41,706
    Next Story
    ×