search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    அர்ஜெண்டினாவில் 10 லட்சத்தைத் தாண்டியது கொரோனா பாதிப்பு

    அர்ஜெண்டினாவில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 10 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
    பியூனோஸ் ஐர்ஸ்:

    சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

    உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் பட்டியலில் அர்ஜெண்டினா 6-வது இடத்தில் உள்ளது.
     
    இந்நிலையில், அர்ஜெண்டினாவில் மேலும் 12, 982 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அங்கு கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 10 லட்சத்தைக் கடந்துள்ளது.
     
    ஒரே நாளில் 449 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அங்கு கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 26 ஆயிரத்து 716 ஆக உள்ளது. கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 8 லட்சத்தை தாண்டியுள்ளது.
    Next Story
    ×