என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாகிஸ்தானில் கோர விபத்து - பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 16 பேர் பலி
Byமாலை மலர்18 Oct 2020 7:38 PM GMT (Updated: 18 Oct 2020 7:38 PM GMT)
பாகிஸ்தானில் சாலையோரம் உள்ள பள்ளத்தில் தலைக்குப்புற பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 16 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் ராவல்பிண்டி நகரில் இருந்து கில்கிட் பால்டிஸ்தான் பிராந்தியத்தில் உள்ள ஸ்கர்து நகர் நோக்கி பயணிகள் பஸ் புறப்பட்டு சென்றது. பஸ்சில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்த பஸ் கில்கிட் பால்டிஸ்தான் பிராந்தியத்தின் ரவுண்டோ நகரில் மலைப்பாங்கான சாலையில் சென்று கொண்டிருந்தபோது, சற்றும் எதிர்பாராத வகையில் அங்கு பாறைகள் உருண்டு நிலச்சரிவு ஏற்பட்டது.
அப்போது பாறை ஒன்றின் மீது மோதிய பஸ் சாலையோரம் உள்ள பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்தது. இந்த கோர விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 16 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் பலத்த படுகாயம் அடைந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X