என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி அர்மீனியா-அசர்பைஜான் இடையே தொடரும் மோதல்
Byமாலை மலர்12 Oct 2020 5:11 PM GMT (Updated: 12 Oct 2020 5:11 PM GMT)
ரஷ்யா முன்னிலையில் ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி அர்மீனியா மற்றும் அசர்பைஜான் நாடுகள் மீண்டும் மோதலில் ஈடுபட்டு வருகின்றன.
யெரிவன்:
அர்மீனியா, அசர்பைஜான் நாடுகளுக்கு இடையேயான எல்லையாக பிரிக்கும் பகுதியில் நகோர்னோ-கராபத் என்ற மாகாணம் அமைந்துள்ளது.
தன்னாட்சி அதிகாரம் பெற்ற இந்த மாகாணத்தை மையமாக கொண்டு பல ஆண்டுகளாக அர்மீனியா - அசர்பைஜான் இடையே மோதல்கள் அரங்கேறி வருகிறது.
கடந்த சில ஆண்டுகளாக சற்று தணிந்திருந்த பதற்றம் கடந்த மாதம் 27 முதல் மீண்டும் தொடங்கியது. நகோர்னோ - கராபத் மாணத்தை முழுவதும் கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தோடு அசர்பைஜான் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலுக்கு அர்மீனிய ஆதரவு படையினர் பதில் தாக்குதல் கொடுத்தும் வந்தனர்.
இந்த மோதலில் அசர்பைஜானுக்கு துருக்கி ஆயுதம் வழங்கியும், சிரியா, லிபியாவில் உள்ள கிளர்ச்சியாளர்களை சண்டையில் களமிறக்கியும் நேரடி உதவி செய்து வருகிறது. நோர்னோ-கராபாத் மாகாண மோதலில் துருக்கியின் தலையீட்டிற்கு ரஷியா, அமெரிக்கா, பிரான்ஸ், சிரியா போன்ற பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இதற்கிடையில், 10 நாட்களுக்கு மேலாக நடைபெற்று வரும் இந்த மோதலில் குடியிருப்பு பகுதிகள் இரு தரப்பு படையினராலும் தாக்குதலுக்கு உள்ளாகின.
மேலும், மோதலில் பொதுமக்கள், அசர்பைஜான் படையினர், அர்மீனிய படையினர், அர்மீனிய ஆதரவு நகோர்னோ-கராபாத் கிளர்சி படையினர் என அனைத்து தரபினரும் உயிரிழப்பை சந்தித்தன.
இரு நாடுகளும் சண்டையை உடனடியாக நிறுத்த வேண்டும் என ரஷியா, அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற நாடுகள் வேண்டுகோள் விடுத்தன. மேலும், கடந்த 10-ம் தேதி ரஷிய தலைநகர் மாஸ்கோவில் நடந்த பேச்சுவார்த்தையில் அர்மீனியா-அசர்பைஜான் நாடுகள் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது. மேலும், இரு நாடுகளும் போரை நிறுத்துவதாக அறிவித்தன. இதனால், அர்மீனியா-அசர்பைஜான் இடையே மீண்டும் அமைதி திரும்பும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இன்று இரு நாடுகளும் மீண்டும் மோதலில் ஈடுபட்டு வருகின்றன. இரு நாடுகளும் ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்தி தாக்குதலில் ஈடுபட்டி வருகின்றனர்.
இரு நாடுகளின் தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள், அர்மீனியா, அசர்பைஜான் பாதுகாப்பு படையினர், அர்மீனிய ஆதிரவு படையினர், சிரியா, லிபியாவை சேர்ந்த கிளர்ச்சியாளர்கள் என இதுவரை சுமார் 500 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பொதுமக்கள் நூற்றுக்கணக்கானோர் தங்கள் வீடுகளையும், உடைமைகளையும் இழந்துள்ளனர்.
சண்டை தொடர்ந்து நீடித்து வருவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X