என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
லிபியா நாட்டில் கடத்தப்பட்ட 7 இந்தியர்கள் விடுவிப்பு
Byமாலை மலர்12 Oct 2020 1:19 AM GMT (Updated: 12 Oct 2020 1:40 AM GMT)
லிபியாவில் கடத்தப்பட்ட 7 இந்திய தொழிலாளர்கள் பத்திரமாக விடுவிக்கப்பட்டனர்.
திரிபோலி:
வட ஆப்பிரிக்காவில் உள்ள நாடான லிபியாவில் ஏராளமான வெளிநாட்டு தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். அங்கு இந்தியாவை சேர்ந்த தொழிலாளர்களும் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர்.
லிபியாவில் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் உள்ளது. அடிக்கடி வெளிநாட்டு தொழிலாளர்களை கடத்திச் சென்று பணம் கேட்டு மிரட்டி வருகின்றனர்.
இதற்கிடையே, லிபியாவில் பணிபுரிந்து வந்த 7 இந்திய தொழிலாளர்களை செப்டம்பர் 14ம் தேதி பயங்கரவாதிகள் கடத்திச் சென்றனர். அவர்களை விடுவிக்க 20 ஆயிரம் அமெரிக்க டாலர் வழங்க வேண்டுமென மிரட்டல் விடுத்திருந்தனர்.
கடத்தப்பட்ட இந்தியர்களில் ஒருவர் முன்னா சவுகான். இவர் உத்தரபிரதேச மாநிலம், குஷி நகர் மாவட்டம், கர்ஹியா பசந்த்பூர் கிராமத்தை சேர்ந்தவர். அவர் கடத்தப்பட்டது குறித்து உறவினர் லாலன் பிரசாத் டெல்லி போலீசில் புகார் செய்துள்ளார்.
லிபியாவில் கடத்தப்பட்டுள்ள 7 இந்தியர்களை மீட்க இந்திய வெளியுறவுத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.
லிபியாவில் இந்திய தூதரகம் அமைக்கப்படவில்லை என்பதால் துனீசியா தூதரகம் மூலம் இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், லிபியாவில் கடத்தப்பட்ட 7 இந்திய தொழிலாளர்களும் பத்திரமாக விடுவிக்கப்பட்டனர் என துனீசியா நாட்டு இந்திய தூதரக அதிகாரி புனீத் ராய் தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X