என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பிரான்ஸ், இத்தாலியை புரட்டி போட்ட ‘அலெக்ஸ்’ புயல்
Byமாலை மலர்4 Oct 2020 7:30 PM GMT (Updated: 4 Oct 2020 7:30 PM GMT)
பிரான்ஸ் நாட்டின் தெற்குப் பகுதிகள் மற்றும் இத்தாலியின் வடமேற்கு பகுதிகளை ‘அலெக்ஸ்’ என்ற சக்தி வாய்ந்த புயல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரோம்:
பிரான்ஸ் நாட்டின் தெற்குப் பகுதிகள் மற்றும் இத்தாலியின் வடமேற்கு பகுதிகளை ‘அலெக்ஸ்’ என்ற சக்தி வாய்ந்த புயல் சின்னாபின்னமாக்கி விட்டது. மணிக்கு 112 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று சுழன்றடித்தது. புயலைத் தொடர்ந்து பேய் மழை கொட்டியதால் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
பிரான்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள நைஸ் நகரம் இந்தப் புயல் மற்றும் மழையால் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது.
பிரான்ஸ் நாட்டின் தெற்குப் பகுதிகள் மற்றும் இத்தாலியின் வடமேற்கு பகுதிகளை ‘அலெக்ஸ்’ என்ற சக்தி வாய்ந்த புயல் சின்னாபின்னமாக்கி விட்டது. மணிக்கு 112 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று சுழன்றடித்தது. புயலைத் தொடர்ந்து பேய் மழை கொட்டியதால் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
பிரான்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள நைஸ் நகரம் இந்தப் புயல் மற்றும் மழையால் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது.
அங்குள்ள ஆறுகள் ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஊர்களுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் வாகனப் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது. நைஸ் நகரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. சாலையில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
புயல் மற்றும் மழை வெள்ளம் தொடர்பான சம்பவங்களில் 8 பேர் மாயமாகி உள்ளனர். இதேபோல் இத்தாலியின் வட மேற்குப் பகுதிகளிலும் பல இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அங்கு சாலைகள் மற்றும் பாலங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இத்தாலியின் ஆஸ்டா பள்ளத்தாக்கு மற்றும் பீட்மாண்ட் பிராந்தியத்தில் 2 பேர் வெள்ளத்தில் சிக்கி பலியானதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் 17 பேர் மாயமாகி உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X