search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விளாடிமிர் புதின்
    X
    விளாடிமிர் புதின்

    ’என் மீதான தாக்குதலுக்கு விளாடிமிர் புதின் தான் காரணம் ‘ - கொடிய விஷத்தால் பாதிக்கப்பட்ட ரஷிய எதிர்க்கட்சி தலைவர் குற்றச்சாட்டு

    தான் கொடிய விஷத்தால் பாதிக்கப்பட்ட ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் தான் காரணம் என்றும் அவர்தான் திட்டமிட்டு இந்த தாக்குதலை நடத்தியதாகவும் கோமாவில் இருந்து மீண்ட ரஷிய எதிர்க்கட்சி தலைவர் நவல்னி குற்றச்சாட்டியுள்ளார்.
    பெர்லின்:

    ரஷியாவின் எதிர்க்கட்சி தலைவராக செயல்பட்டு வருபவர் அலெக்ஸி நவல்னி. இவர் அதிபர் விளாடிமிர் புதினின் ஆட்சிக்கு எதிராக பல ஆண்டுகளாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்.

    இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 20 ஆம் தேதி ரஷியாவின் ஒம்சக் நகரில் இருந்து விமானம் மூலம் மாஸ்கோவிற்கு பயணம் மேற்கொண்டார். விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் நவல்னிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. 

    இதனால் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானம் அவசர அவசரமாக ஒம்சக் நகரிலேயே மீண்டும் தரையிறக்கப்பட்டு நவல்னி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

    ஒம்சக் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நவல்னியின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாகவும் அவர் கோமா நிலைக்கு சென்றுவிட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

    இதையடுத்து, நவல்னிக்கு கூடுதல் சிகிச்சையளிக்க ஜெர்மனி முன்வந்தது. உடனடியாக ரஷிய அரசின் அனுமதியுடன் நவல்னி ஒம்சக் நகரில் இருந்து ஜெர்மனி நாட்டிற்கு சிறப்பு விமானம் மூலம் கொண்டு வரப்பட்டார்.

    பெர்லினில் வைத்து நவல்னிக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. நரம்பு மண்டலத்தை தாக்கும் கொடிய விஷத்தன்மை உடைய நோவிசோக் என்ற வேதிப்பொருள் தாக்குதலுக்கு நவல்னி உள்ளாகியுள்ளதாக ஜெர்மனி மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். தொடர் சிகிச்சை காரணமாக கடந்த 8-ம் தேதி நவல்னி கோமா நிலையில் இருந்து மீண்டார். 

    20 நாட்களுக்கு மேலாக வெண்டிலேட்டர் உதவியுடன் சுவாதித்து வந்த நவல்னி கடந்த 16-ம் தேதி முதல் வெண்டிலேட்டர் உதவியில்லாமல் தன்னிச்சையாக சுவாசிக்கும் நிலைக்கு முன்னேற்றம் அடைந்தார். இது தொடர்பாக சமூக வலைதளத்தில் நவல்னி பல்வேறு புகைப்படங்களையும் வெளியிட்டு வந்தார்.

    இதற்கிடையில், நரம்பு மண்டலத்தை தாக்கும் கொடிய விஷத்தால் பாதிக்கப்பட்டிருந்த அலெக்ஸி நவல்னி பூரண குணமடைந்ததையடுத்து கடந்த 24-ம் தேதி அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

    மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டாலும் உடல்நிலை பூரணமாக குணமடையும் வரை நவல்னி தொடர்ந்து சில நாட்களுக்கு ஜெர்மனியிலேயே தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்.

    நவல்னி

    இந்நிலையில், கொடிய விஷ தாக்குதலில் இருந்து உயிர்பிழைத்த நவல்னி தன் மீதான இந்த தாக்குதலுக்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் தான் காரணம் என்று குற்றச்சுமத்தியுள்ளார்.

    இது தொடர்பாக ஜெர்மனி செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த பேட்டியின்போது நவல்னி கூறுகையில்,’ என் மீதான இந்த தாக்குதலுக்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் தான் காரணம் என நான் குற்றச்சுமத்துகிறேன். இதில் எனக்கு எந்த ஒரு மாறுபட்ட கருத்தும் கிடையாது.

    விஷத்தன்மை உடைய நோவிசோக் என்ற வேதிப்பொருள் உங்கள் உடலில் செயல்படத்தொடங்கும்போது நீங்கள் எந்த வலியையும் நீங்கள் உணரமாட்டீர்கள் ஆனால் நீங்கள் உயிரிழந்துவிடுவீர்கள். மீண்டும் ரஷியா செல்வீர்களா? என்று செய்தியாளார் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த நவல்னி,’எனது இப்போதைய வேலை பயப்படாமல் இருப்பது... எனக்கு எந்த ஒரு பயமும் இல்லை’ என்றார். 

    நவல்னியின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள ரஷிய பாராளுமன்றத்தில் கீழவை தலைவர் வலோடின், விமானிகள் முதல் மருத்துவர்கள், அதிபர் விளாடிமிர் புதின் வரை நவல்னி உயிர் பிழைக்க காரணம் தெரிவித்துள்ளார். 

    Next Story
    ×