என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பார்வையாளர்களிடம் மரியாதை குறைவாக பேசிய கிளிகள் - தனிமைப்படுத்திய பூங்கா நிர்வாகம்
Byமாலை மலர்30 Sep 2020 6:00 PM GMT (Updated: 30 Sep 2020 6:00 PM GMT)
இங்கிலாந்தில் பார்வையாளர்களிடம் மரியாதை குறைவாக பேசிய கிளிகளை தனியாக வேறொரு இடத்திற்கு பூங்கா நிர்வாகத்தினர் மாற்றியுள்ளனர்.
லண்டன்:
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள லின்கோல்ன்ஷைர் என்ற உயரியல் பூங்காவில் கிளிகள் இருப்பிடத்திற்கு கடந்த ஆகஸ்ட் மாதம் பில்லி, எரிக், டைசன், ஜேடே மற்றும் எலிசி என்ற பெயர்கள் கொண்ட 5 ஆப்பிரிக்க கிளிகள் புதிய வரவாக வந்து சேர்ந்தன. இவை வந்த சில நாட்களிலேயே பார்வையாளர்களிடம் கிண்டலாகவும் மரியாதைக் குறைவாகவும் நடந்து கொள்வதாக நிர்வாகத்தினருக்கு புகார் வந்தது.
ஒரு கிளி பார்வையாளரிடம் சத்தியம் செய்யும், மற்றொரு கிளி பார்வையாளரை பார்த்து சிரிக்கும், இன்னொரு கிளி மரியாதை குறைவாக பேசும். மனம் புண்படும் படி கிளிகள் நடந்து கொண்டதாக பார்வையாளர்கள் இதுவரை புகார் அளிக்கவில்லை என்றாலும் நிர்வாகத்தினர் அவற்றை தனியாக வேறொரு இடத்திற்கு மாற்றியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆப்பிரிக்க சாம்பல் கிளிகள் குறிப்பாக அனைத்து வகையான சத்தங்களிலிருந்தும் குரல்களைக் கற்றுக்கொள்வதில் திறமையானவை என்று பூங்கா நிர்வாகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டீவ் நிக்கோல்ஸ் கூறியுள்ளார்.
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள லின்கோல்ன்ஷைர் என்ற உயரியல் பூங்காவில் கிளிகள் இருப்பிடத்திற்கு கடந்த ஆகஸ்ட் மாதம் பில்லி, எரிக், டைசன், ஜேடே மற்றும் எலிசி என்ற பெயர்கள் கொண்ட 5 ஆப்பிரிக்க கிளிகள் புதிய வரவாக வந்து சேர்ந்தன. இவை வந்த சில நாட்களிலேயே பார்வையாளர்களிடம் கிண்டலாகவும் மரியாதைக் குறைவாகவும் நடந்து கொள்வதாக நிர்வாகத்தினருக்கு புகார் வந்தது.
ஒரு கிளி பார்வையாளரிடம் சத்தியம் செய்யும், மற்றொரு கிளி பார்வையாளரை பார்த்து சிரிக்கும், இன்னொரு கிளி மரியாதை குறைவாக பேசும். மனம் புண்படும் படி கிளிகள் நடந்து கொண்டதாக பார்வையாளர்கள் இதுவரை புகார் அளிக்கவில்லை என்றாலும் நிர்வாகத்தினர் அவற்றை தனியாக வேறொரு இடத்திற்கு மாற்றியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆப்பிரிக்க சாம்பல் கிளிகள் குறிப்பாக அனைத்து வகையான சத்தங்களிலிருந்தும் குரல்களைக் கற்றுக்கொள்வதில் திறமையானவை என்று பூங்கா நிர்வாகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டீவ் நிக்கோல்ஸ் கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X