என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டிக்-டாக் செயலி மீதான தடை : ஜனாதிபதி டிரம்பின் உத்தரவுக்கு இடைக்கால தடை
Byமாலை மலர்28 Sep 2020 9:03 PM GMT (Updated: 28 Sep 2020 9:03 PM GMT)
டிக்-டாக் செயலிக்கு தடை விதிக்கும் டிரம்ப் நிர்வாகத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
வாஷிங்டன்:
சீனாவின் டிக்-டாக் மற்றும் வீ சாட் செயலிகள் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி அந்த செயலிகளுக்கு தடை விதிக்கும் நிர்வாக உத்தரவில் ஜனாதிபதி டிரம்ப் கடந்த மாதம் 6-ந்தேதி கையெழுத்திட்டார். இந்த தடை உத்தரவு 45 நாளில் நடைமுறைக்கு வரும் என கூறப்பட்டிருந்தது. அதன்படி கடந்த 20-ந்தேதி முதல் அமெரிக்காவில் டிக்-டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து டிரம்ப் நிர்வாகத்தின் இந்த தடை உத்தரவை எதிர்த்து வாஷிங்டனில் உள்ள கொலம்பியா மாவட்ட கோர்ட்டில் டிக்-டாக் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நீதிபதி கார்ல் நிகோல்ஸ் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது டிக்-டாக் நிறுவனம் சார்பில் ஆஜரான வக்கீல்கள் டிரம்ப் நிர்வாகத்தின் இந்த தடை உத்தரவு முதல் சட்டத் திருத்த உரிமைகளை மீறுவதாகும், வர்த்தகத்துக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு ஏற்படுவதாகவும் என்று வாதிட்டனர்.
அதனைத் தொடர்ந்து டிக்-டாக் செயலிக்கு தடை விதிக்கும் டிரம்ப் நிர்வாகத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
சீனாவின் டிக்-டாக் மற்றும் வீ சாட் செயலிகள் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி அந்த செயலிகளுக்கு தடை விதிக்கும் நிர்வாக உத்தரவில் ஜனாதிபதி டிரம்ப் கடந்த மாதம் 6-ந்தேதி கையெழுத்திட்டார். இந்த தடை உத்தரவு 45 நாளில் நடைமுறைக்கு வரும் என கூறப்பட்டிருந்தது. அதன்படி கடந்த 20-ந்தேதி முதல் அமெரிக்காவில் டிக்-டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து டிரம்ப் நிர்வாகத்தின் இந்த தடை உத்தரவை எதிர்த்து வாஷிங்டனில் உள்ள கொலம்பியா மாவட்ட கோர்ட்டில் டிக்-டாக் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நீதிபதி கார்ல் நிகோல்ஸ் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது டிக்-டாக் நிறுவனம் சார்பில் ஆஜரான வக்கீல்கள் டிரம்ப் நிர்வாகத்தின் இந்த தடை உத்தரவு முதல் சட்டத் திருத்த உரிமைகளை மீறுவதாகும், வர்த்தகத்துக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு ஏற்படுவதாகவும் என்று வாதிட்டனர்.
அதனைத் தொடர்ந்து டிக்-டாக் செயலிக்கு தடை விதிக்கும் டிரம்ப் நிர்வாகத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X