என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
8 மாத தீவிர பயிற்சிக்கு பிறகு வெடிகுண்டு நிபுணர்களாக 5 பெண்கள் பணிநியமனம்
Byமாலை மலர்28 Sep 2020 12:27 AM GMT (Updated: 28 Sep 2020 12:27 AM GMT)
துபாயில் கடந்த 8 மாதங்களாக தீவிர பயிற்சி பெற்ற 5 பெண் களுக்கு வெடிகுண்டு நிபுணர்களாக பணிநியமனம் வழங்கப்பட்டது.
துபாய்:
துபாயில் தொடர்ந்து பல்வேறு ஆக்கப்பூர்வமான துறைகளில் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்கப்பட்டு வருகிறது. இதில் தற்போது போலீஸ் துறையில் பணியாற்றிய 5 பெண் அதிகாரிகளுக்கு வெடிகுண்டு நிபணர்களாக பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய இந்த பயிற்சி இந்த மாதத்தில் நிறைவடைந்தது. சிறப்பான முறையில் பயிற்சியை நிறைவு செய்துள்ள அவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது.
இவர்கள் 5 பேருக்கும் வெடிகுண்டு பாதுகாப்பு பிரிவில் அதிகாரியாக பணி நியமனம் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்டு மாதத்தில் ரீம் அப்துல் ரஹ்மான் என்ற பெண் அதிகாரி முதல் பெண் வெடிகுண்டு நிபுணராக தேர்ச்சி பெற்றார்.
அதனை தொடர்ந்து நூப் முகம்மது இப்ராகிம், கொலவுத் அப்துல்லா அல் மர்ரி, ஆயிஷா முகம்மது அப்துல்லா, அபீர் முகம்மது இப்ராகிம் ஆகிய பெண் அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இவர்கள் அனைவருக்கும் திறன் மேம்பாடு, உடற்தகுதியை பராமரிப்பது, வெடிகுண்டுகள் குறித்த பாடவகுப்புகள், செயல்முறை பயிற்சிகள் ஆகியவை சிறப்பாக அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இவர்களது பணியானது உரிமம் பெறாத வெடிக்கும் பொருட்களை செயலிழக்க வைப்பது, மண்ணிற்கு சேதம் விளைவிக்காமல் பாதுகாப்பாக வெடிபொருட்களை அகற்றுவது, சட்டவிரோதமான வெடிகுண்டுகள் மற்றும் அபாயகரமான பட்டாசுகளை அழிப்பது போன்றவைகளை மேற்கொள்ளவதாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
துபாயில் தொடர்ந்து பல்வேறு ஆக்கப்பூர்வமான துறைகளில் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்கப்பட்டு வருகிறது. இதில் தற்போது போலீஸ் துறையில் பணியாற்றிய 5 பெண் அதிகாரிகளுக்கு வெடிகுண்டு நிபணர்களாக பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய இந்த பயிற்சி இந்த மாதத்தில் நிறைவடைந்தது. சிறப்பான முறையில் பயிற்சியை நிறைவு செய்துள்ள அவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது.
இவர்கள் 5 பேருக்கும் வெடிகுண்டு பாதுகாப்பு பிரிவில் அதிகாரியாக பணி நியமனம் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்டு மாதத்தில் ரீம் அப்துல் ரஹ்மான் என்ற பெண் அதிகாரி முதல் பெண் வெடிகுண்டு நிபுணராக தேர்ச்சி பெற்றார்.
அதனை தொடர்ந்து நூப் முகம்மது இப்ராகிம், கொலவுத் அப்துல்லா அல் மர்ரி, ஆயிஷா முகம்மது அப்துல்லா, அபீர் முகம்மது இப்ராகிம் ஆகிய பெண் அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இவர்கள் அனைவருக்கும் திறன் மேம்பாடு, உடற்தகுதியை பராமரிப்பது, வெடிகுண்டுகள் குறித்த பாடவகுப்புகள், செயல்முறை பயிற்சிகள் ஆகியவை சிறப்பாக அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இவர்களது பணியானது உரிமம் பெறாத வெடிக்கும் பொருட்களை செயலிழக்க வைப்பது, மண்ணிற்கு சேதம் விளைவிக்காமல் பாதுகாப்பாக வெடிபொருட்களை அகற்றுவது, சட்டவிரோதமான வெடிகுண்டுகள் மற்றும் அபாயகரமான பட்டாசுகளை அழிப்பது போன்றவைகளை மேற்கொள்ளவதாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X