என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வங்கி கடன் வழக்கு - லண்டன் ஐகோர்ட்டில் அனில் அம்பானியிடம் விசாரணை
Byமாலை மலர்26 Sep 2020 8:19 PM GMT (Updated: 26 Sep 2020 8:19 PM GMT)
சீன வங்கிகளுடன் மேற்கொள்ளப்பட்ட கடன் ஒப்பந்த வழக்கு தொடர்பாக அனில் அம்பானியிடம் காணொலி காட்சி மூலம் விசாரணை நடத்தப்பட்டது.
லண்டன்:
3 சீன வங்கிகளுடன் மேற்கொள்ளப்பட்ட கடன் ஒப்பந்தம் தொடர்பான வழக்கில், 61 வயதான ரிலையன்ஸ் நிறுவன அதிபர் அனில் அம்பானி மீது லண்டனில் உள்ள ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த வழக்கில், அனில் அம்பானியின் சொத்துகள் பற்றிய விவரங்களை தாக்கல் செய்யுமாறு ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது.
இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக அனில் அம்பானியிடம் காணொலி காட்சி மூலம் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது. தன்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மும்பையில் இருந்தபடி அவர் பதில் அளித்தார். அப்போது சீன வங்கிகள் சார்பில் ஆஜரான வக்கீல், அனில் அம்பானியிடம் ஆடம்பரமாக வாழ்வது பற்றியும், அவரிடம் ஆடம்பர கார்கள் இருப்பது பற்றியும் கேள்வி எழுப்பினார். அதற்கு அனில் அம்பானி பதில் அளிக்கையில், ஊடகங்களில் வெளியான தகவல்கள் அடிப்படையில் தான் ஆடம்பரமாக வாழ்வதாக கூறப்படுவதாகவும், ஆனால் தான் எளிமையான, ஒழுக்கமான வாழ்க்கையை வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்தார்.
3 சீன வங்கிகளுடன் மேற்கொள்ளப்பட்ட கடன் ஒப்பந்தம் தொடர்பான வழக்கில், 61 வயதான ரிலையன்ஸ் நிறுவன அதிபர் அனில் அம்பானி மீது லண்டனில் உள்ள ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த வழக்கில், அனில் அம்பானியின் சொத்துகள் பற்றிய விவரங்களை தாக்கல் செய்யுமாறு ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது.
இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக அனில் அம்பானியிடம் காணொலி காட்சி மூலம் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது. தன்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மும்பையில் இருந்தபடி அவர் பதில் அளித்தார். அப்போது சீன வங்கிகள் சார்பில் ஆஜரான வக்கீல், அனில் அம்பானியிடம் ஆடம்பரமாக வாழ்வது பற்றியும், அவரிடம் ஆடம்பர கார்கள் இருப்பது பற்றியும் கேள்வி எழுப்பினார். அதற்கு அனில் அம்பானி பதில் அளிக்கையில், ஊடகங்களில் வெளியான தகவல்கள் அடிப்படையில் தான் ஆடம்பரமாக வாழ்வதாக கூறப்படுவதாகவும், ஆனால் தான் எளிமையான, ஒழுக்கமான வாழ்க்கையை வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X