search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிகிச்சையை விளக்கும் மருத்துவர்
    X
    சிகிச்சையை விளக்கும் மருத்துவர்

    உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3.27 கோடியாக உயர்வு

    உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3.27 கோடியைத் தாண்டியுள்ளது.
    ஜெனீவா:

    சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
     
    இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3.27 கோடியைத் தாண்டியுள்ளது.

    உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி மீண்டவர்கள் எண்ணிக்கை 2.40 கோடியைக் கடந்துள்ளது.

    கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் 63 ஆயிரத்து 700-க்கும் அதிகமானோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 9.92 லட்சத்தைக் கடந்துள்ளது.  
    Next Story
    ×