என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஒட்டகங்களுக்கு உணவளித்த துபாய் பட்டத்து இளவரசர்
Byமாலை மலர்18 Sep 2020 3:47 AM GMT (Updated: 18 Sep 2020 3:47 AM GMT)
துபாய் பட்டத்து இளவரசர் மேதகு ஷேக் ஹம்தான் பின் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் ஒட்டகங்களுக்கு தன் கையால் உணவு வழங்கும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
துபாய்:
துபாய் பட்டத்து இளவரசர் மேதகு ஷேக் ஹம்தான் பின் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் பிராணிகள் மற்றும் மற்ற விலங்கினங்களிடம் மிகுந்த பாசத்துடன் பழகும் பண்புடையவர். அவர் சொந்தமாக பல்வேறு வனவிலங்குகள் மற்றும் செல்லப்பிராணிகளை வளர்த்து வருகிறார்.
சமீபத்தில் தனது விலை உயர்ந்த சொகுசு காரை சிறு பறவை கூடு கட்டி வாழ அளித்து அனைவரின் கவனத்தையும், பாராட்டையும் பெற்றார். அதனை தொடர்ந்து தற்போது மீண்டும் வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். அதில் தனது காரில் ஒட்டகங்கள் பராமரிப்பு பகுதிக்கு சென்றார். அவர் சென்றதும் ஒட்டகங்கள் கூட்டமாக அவரது வாகனத்தை சூழ்ந்து கொண்டன.
பின்னர், அருகில் அமர்ந்துள்ளவர் தட்டில் உணவை வைத்து கொடுக்க அதனை பட்டத்து இளவரசர் எடுத்து தருகிறார். அந்த ஒட்டகங்கள் அதனை ஆர்வத்துடன் வந்து சாப்பிட்டன. அதிலும் ‘எமார்’ மற்றும் ‘பர்ரிஸ்’ என்ற பெயரில் உள்ள ஒட்டகங்களை அழைத்து வாஞ்சையுடன் தடவிக் கொடுத்தார்.
இதையடுத்து, அந்த காரை விட்டு இறங்கி அதன் முன்புறத்தில் இலை, தழைகளை வைத்து அனைத்து ஒட்டகங்களுக்கும் உணவளித்தார். ஒட்டகங்களுடன் அவர் உரையாடி உணவளித்த வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும் அவருக்கு பல தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.
துபாய் பட்டத்து இளவரசர் மேதகு ஷேக் ஹம்தான் பின் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் பிராணிகள் மற்றும் மற்ற விலங்கினங்களிடம் மிகுந்த பாசத்துடன் பழகும் பண்புடையவர். அவர் சொந்தமாக பல்வேறு வனவிலங்குகள் மற்றும் செல்லப்பிராணிகளை வளர்த்து வருகிறார்.
சமீபத்தில் தனது விலை உயர்ந்த சொகுசு காரை சிறு பறவை கூடு கட்டி வாழ அளித்து அனைவரின் கவனத்தையும், பாராட்டையும் பெற்றார். அதனை தொடர்ந்து தற்போது மீண்டும் வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். அதில் தனது காரில் ஒட்டகங்கள் பராமரிப்பு பகுதிக்கு சென்றார். அவர் சென்றதும் ஒட்டகங்கள் கூட்டமாக அவரது வாகனத்தை சூழ்ந்து கொண்டன.
பின்னர், அருகில் அமர்ந்துள்ளவர் தட்டில் உணவை வைத்து கொடுக்க அதனை பட்டத்து இளவரசர் எடுத்து தருகிறார். அந்த ஒட்டகங்கள் அதனை ஆர்வத்துடன் வந்து சாப்பிட்டன. அதிலும் ‘எமார்’ மற்றும் ‘பர்ரிஸ்’ என்ற பெயரில் உள்ள ஒட்டகங்களை அழைத்து வாஞ்சையுடன் தடவிக் கொடுத்தார்.
இதையடுத்து, அந்த காரை விட்டு இறங்கி அதன் முன்புறத்தில் இலை, தழைகளை வைத்து அனைத்து ஒட்டகங்களுக்கும் உணவளித்தார். ஒட்டகங்களுடன் அவர் உரையாடி உணவளித்த வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும் அவருக்கு பல தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X