என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனாவை வெல்ல உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும் - ஐ.நா. பொதுச்செயலாளர் அழைப்பு
Byமாலை மலர்18 Sep 2020 1:41 AM GMT (Updated: 18 Sep 2020 1:41 AM GMT)
கொரோனாவை வெல்ல உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் கூறியுள்ளார்.
நியூயார்க்:
கொரோனா தொற்று உலகம் முழுவதும் தொடர்ந்து பரவி வரும் நிலையில், இது நம்பர் ஒன் உலகளாவிய பாதுகாப்பு அச்சுறுத்தலாக இருப்பதாக ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘கொரோனாவை வெல்வதற்கு சர்வதேச சமூகம் ஒன்றிணைய வேண்டிய தருணம் இது. பலர் தங்கள் நம்பிக்கையை ஒரு தடுப்பூசி மீது வைத்திருக்கிறார்கள். ஆனால் தெளிவாக இருக்கட்டும், ஒரு தொற்றுநோய்க்கான சஞ்சீவி எங்கும் இல்லை. இந்த நெருக்கடியை ஒரு தடுப்பூசி மட்டும் போக்காது.
மேலும் புதிய தொற்றுகளை கட்டுப்படுத்துவதற்கான வாய்ப்புகளை நாடுகள் பெருமளவில் விரிவுபடுத்த வேண்டும். தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கும், உயிர்களை காக்கவும் குறிப்பாக அடுத்த 12 மாதங்களுக்குள்ளாக முக்கிய சிகிச்சையை ஒன்றிணைந்து வழங்க வேண்டும். கொரோனா பெருந்தொற்று நமது வாழ்நாளில் கண்டிராத ஒரு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே இந்த ஆண்டு ஐ.நா. பொதுச்சபை கூட்டம் வழக்கமான முறையில் இருக்காது எனவும் குட்டரெஸ் குறிப்பிட்டார்.
கொரோனா தொற்று உலகம் முழுவதும் தொடர்ந்து பரவி வரும் நிலையில், இது நம்பர் ஒன் உலகளாவிய பாதுகாப்பு அச்சுறுத்தலாக இருப்பதாக ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘கொரோனாவை வெல்வதற்கு சர்வதேச சமூகம் ஒன்றிணைய வேண்டிய தருணம் இது. பலர் தங்கள் நம்பிக்கையை ஒரு தடுப்பூசி மீது வைத்திருக்கிறார்கள். ஆனால் தெளிவாக இருக்கட்டும், ஒரு தொற்றுநோய்க்கான சஞ்சீவி எங்கும் இல்லை. இந்த நெருக்கடியை ஒரு தடுப்பூசி மட்டும் போக்காது.
மேலும் புதிய தொற்றுகளை கட்டுப்படுத்துவதற்கான வாய்ப்புகளை நாடுகள் பெருமளவில் விரிவுபடுத்த வேண்டும். தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கும், உயிர்களை காக்கவும் குறிப்பாக அடுத்த 12 மாதங்களுக்குள்ளாக முக்கிய சிகிச்சையை ஒன்றிணைந்து வழங்க வேண்டும். கொரோனா பெருந்தொற்று நமது வாழ்நாளில் கண்டிராத ஒரு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே இந்த ஆண்டு ஐ.நா. பொதுச்சபை கூட்டம் வழக்கமான முறையில் இருக்காது எனவும் குட்டரெஸ் குறிப்பிட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X