என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பிரிந்து சென்ற மனைவி படுகொலை -பிரிட்டனில் இந்திய வம்சாவளி வாலிபருக்கு ஆயுள் தண்டனை
Byமாலை மலர்17 Sep 2020 10:19 AM GMT (Updated: 17 Sep 2020 10:19 AM GMT)
பிரிட்டனில் பிரிந்து சென்ற மனைவியை படுகொலை செய்த இந்திய வம்சாவளி வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
லண்டன்:
பிரிட்டனின் லெய்செஸ்டர் நகரில் வசித்து வருபவர் ஜிகுகுமார் சோர்த்தி (வயது 23). இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இவர், கடந்த 2017ம் ஆண்டு இந்தியாவிற்கு வந்து பாவினி பிரவின் என்ற பெண்ணை திருமணம் செய்தார். பின்னர் அவரை பிரிட்டனுக்கு அழைத்து சென்றார். ஆனால் இருவரும் தனித்தனி முகவரியில் வசித்து வந்தனர்.
இந்நிலையில், இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. கடந்த கடந்த மார்ச் மாதம் 1ம் தேதி பாவினி பிரவின், ஜிகுகுமார் சோர்த்தியிடம் இருந்து நிரந்தரமாக பிரிந்துவிட்டதாக கூறி உள்ளார். திருமண உறவு முறிந்துவிட்டதாக பாவினியின் குடும்பத்தினரும் கூறி உள்ளனர்.
இதனால் கடும் ஆத்திரமடைந்த ஜிகுகுமார், மார்ச் 2ம் தேதி இரவு பாவினியின் வீட்டுக்கு சென்று இதுபற்றி பேசி உள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஜிகுகுமார், பாவினியை கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த பாவினி, சிறிது நேரத்தில் உயிரிழந்தார்.
அதன்பின்னர் ஜிகுகுமார் போலீசில் நடந்த சம்பவத்தை கூறி சரண் அடைந்துள்ளார். அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு லெய்செஸ்டர் கிரவுன் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் வாதப்பிரதிவாதங்கள் முடிவடைந்த நிலையில், நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
அப்போது, குற்றவாளி ஜிகுகுமார் மீதான குற்றம் நிரூபணமானதால் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். குறைந்தபட்சம் 28 ஆண்டுகள் அவர் சிறைவாசம் அனுபவித்த பிறகே, பரோல் கேட்டு விண்ணப்பிக்க முடியும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X