என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ரஷியாவின் கொரோனா தடுப்பூசி நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது- ஆய்வில் தகவல்
Byமாலை மலர்5 Sep 2020 8:44 AM GMT (Updated: 5 Sep 2020 8:44 AM GMT)
ரஷியாவில் கண்டுபிடிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசி நோய் எதிர்ப்பு சக்தியை அளிப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
மாஸ்கோ:
கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றான ரஷியா, உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை அறிமுகம் செய்துள்ளது. இந்த தடுப்பூசி பரிசோதனைகள் வெற்றிகரமாக முடிந்த நிலையில், தடுப்பூசி பொதுமக்கள் பயன்பாட்டுக்காக தயாராகி, பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசிக்கு ஸ்புட்னிக்-5 என்று பெயரிடப்பட்டுள்ளது.
முதலில் மருத்துவ ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இந்த தடுப்பூசி போடப்படுகிறது. அதைத் தொடர்ந்து பல கட்டங்களாக பொதுமக்களுக்கு இந்த தடுப்பூசி போடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு வரும் ஜனவரி 1-ந் தேதி முதல் இந்த தடுப்பூசியை போட ஆயத்தமாகி வருகின்றனர்.
இந்நிலையில், ரஷியா கண்டுபிடித்திருக்கும் கொரோனா தடுப்பு மருந்தான ஸ்புட்னிக்-5 பாதுகாப்பானது என்றும் எந்தவித பக்க விளைவுகளையும் ஏற்படுத்தவில்லை என்பதும் முதல் இரண்டு கட்ட ஆய்வின் முடிவில் தெரியவந்து இருப்பதாக மருத்துவ இதழான தி லான்செட் தெரிவித்துள்ளது. ஆய்வில் பங்கேற்ற 76 பேருக்கும் கோவிட்-19 வைரசுக்கு எதிரான ஆன்டிபாடிகள் உருவானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மருந்தின் மூலம் உருவான நோய் எதிர்ப்பு சக்தியானது கொரோனாவில் இருந்து இயற்கையாகவே மீண்ட பிறகு மக்கள் கொண்டிருந்த நோயெதிர்ப்பு சக்தியை ஒத்திருந்தது என்றும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நோயெதிர்ப்பு மண்டலத்தின் மற்றொரு அங்கமான டி-செல்கள் உருவாக்கத்தையும் ஆராய்ச்சியாளர்கள் கவனித்தனர். இந்த தடுப்பு மருந்து 28 நாட்களில் டி-செல்களை உருவாக்குகிறது என்றும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
புதிதாக பதிவு செய்யப்பட்ட தடுப்பூசி பாட்டில்கள் கொண்ட புகைப்படத்தை ரஷ்ய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இந்த ஆய்வில் ஈடுபடாத விஞ்ஞானிகள் இதுபற்றி கூறுகையில், ‘தற்போதைய ஆய்வு முடிவுகள் நேர்மறையான அறிகுறியாக இருந்தபோதும், மிகப்பெரிய அளவில் மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கப்படும் 3ஆம் கட்ட சோதனைகளின் முடிவில்தான், இந்த தடுப்பூசி உண்மையில் கொரோனா நோயை தடுக்கிறதா என்பதை உறுதிப்படுத்த முடியும்’ என்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X