search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டிரம்ப்
    X
    டிரம்ப்

    எல்லை பிரச்சினையில் இந்தியா - சீனாவுக்கு உதவ தயார்: அமெரிக்க அதிபர் டிரம்ப்

    எல்லைப் பிரச்சினையில் இந்தியா - சீனா ஆகிய இருநாடுகளுக்கும் உதவ தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
    வாஷிங்டன்:

    கிழக்கு லடாக் பகுதியில் கடந்த 4 மாதங்களாக சீன ராணுவம் ஆக்கிரமிப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதை இந்திய ராணுவம் முறியடித்து வருகிறது. இதனால், இந்தியா - சீனா இடையே கடந்த 1962- ஆம் ஆண்டுக்குப் பிறகு மிகவும் பதற்றமான சூழல் நிலவுகிறது. 

    இந்த நிலையில், இந்தியா- சீனா இடையேயான எல்லைப் பிரச்சினையில் இருநாடுகளுக்கும் உதவ தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த டிரம்ப் இவ்விவகாரம் குறித்து பேசுகையில், “ இந்தியா - சீனா இடையேயான எல்லை பிரச்சினை மிகவும் மோசமாக உள்ளது.  சீனர்கள் எல்லைப் பிரச்சினையில் மிகவும் வலுவாக செல்கின்றனர். சீனா - இந்தியா ஆகிய இருநாடுகளுக்கும் எல்லைப் பிரச்சினையில் உதவ தயாராக இருக்கிறோம். இருநாடுகளிடமும் இது பற்றி தொடர்ந்து பேசி வருகிறோம்” என்றார். 

    இந்தியாவிடம் சீனா அத்துமீறலில் ஈடுபடுகிறதா? என டிரம்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது . இதற்கு பதிலளித்த டிரம்ப், இல்லை என்று நம்புகிறேன். ஆனால்,  ஆனால் அவர்கள் (சீனா) நிச்சயமாக அதற்கு போகிறார்கள். நிறைய பேர் புரிந்துகொள்வதை விட அவர்கள் மிகவும் வலுவாக செல்கிறார்கள்” என்றார். 

    Next Story
    ×