என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனாவால், இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் வறுமையில் வாடும் பெண்கள் விகிதம் உயரும்
Byமாலை மலர்3 Sep 2020 7:55 PM GMT (Updated: 3 Sep 2020 7:55 PM GMT)
கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோயால் இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் வறுமையில் வாடும் பெண்களின் விகிதம் உயரும் என ஐ.நா. அறிக்கை அம்பலப்படுத்துகிறது.
நியூயார்க்:
ஐ.நா. சபையில் கொரோனா வைரஸ் தொற்றை அடுத்து பாலின சமத்துவம் என்ற தலைப்பில், ஐ.நா. பெண்கள் மற்றும் ஐ.நா. வளர்ச்சி திட்டம் சார்பில் ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் தாக்கலான இந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-
* கொரோனாவால் தெற்காசியாவில் (இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், பூடான், மாலத்தீவு, நேபாளம், இலங்கை) பாலின வறுமை இடைவெளி இன்னும் மோசம் அடையும்.
* பெருந்தொற்றால் தெற்காசியாவில் வறுமையில் வாடும் பெண்கள் விகிதம் உயரும். 25-34 வயதுக்குட்பட்ட ஆண்களை விட அதிகமான பெண்கள் அடுத்த 10 ஆண்டுகளில் ஏழ்மை நிலையில் இருப்பார்கள்.
* கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோய், 2021-க்குள் 4 கோடியே 70 லட்சம் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளை கடும் வறுமையில் தள்ளிவிடும்.
* உலகிலேயே கடுமையான ஏழ்மை நிலையில் உள்ளவர்களில் 87 சதவீதம் பேர் வசிக்கிற மத்திய மற்றும் தெற்காசியாவிலும், ஆப்பிரிக்காவிலும் வறுமை மேலும் அதிகரிக்கும். அதாவது மத்திய மற்றும் தெற்காசியாவில் மேலும் 5 கோடியே 40 லட்சம் பேரும், ஆப்பிரிக்காவில் 2 கோடியே 40 லட்சம் பேரும் சர்வதேச வறுமைக்கோட்டுக்கு கீழே வாழும் நிலையை கொரோனா ஏற்படுத்தி விடும்.
* தெற்காசியாவில் வறுமை பெருக காரணம், பெருந்தொற்று நோயால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி ஆகும்.
* கொரோனா காலத்துக்கு முன்பாக 2021-ம் ஆண்டில் தெற்காசியாவில் வறுமையில் வாடும் பெண்கள் விகிதம் 10 சதவீதமாக இருக்கும் என கணக்கிடப்பட்டது. இப்போது கொரோனாவுக்கு பின்னே இந்த விகிதம், 13 சதவீதமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
* பெருந்தொற்றால் வறுமை மீண்டும் எழுச்சி பெற்றிருப்பது பாலின வறுமை இடைவெளிகளை மேலும் ஆழமாக்கும். 25-34 வயதுடையவர்களுக்கு இது பொருந்தும்.
* அடுத்த ஆண்டில் (2021) உலகளவில் 100 ஆண்களுக்கு 118 பெண்கள் என்ற அளவில் ஏழைகள் இருப்பார்கள். 2030-ல் இது 100 ஆண்களுக்கு 121 பெண்கள் என்ற அளவுக்கு மேலும் உயரும். 25-34 வயதினரில், 100 ஆண்களுக்கு 118 பெண்கள் என்ற விகிதாசாரம் தெற்காசியாவில் இருக்கும். இதுவே 2030-ல் 100 ஆண்களுக்கு 129 பெண்கள் என்ற அளவுக்கு அதிகரிக்கும்.
* உலகளவில் பெண்கள் வறுமை விகிதம் 2019-2021 இடைவெளி 2.7 சதவீதம் குறையும் என எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் கொரோனாவால் இடைவெளி 9.1 சதவீதமாக அதிகரிக்கும். இந்த பெருந்தொற்று நோய், அடுத்த ஆண்டுக்குள் 9 கோடியே 60 லட்சம் பேரை கூடுதலாக கடும் வறுமையில் தள்ளும். அவர்களில் 4 கோடியே 70 லட்சம் பேர் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் ஆவர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஐ.நா. சபையில் கொரோனா வைரஸ் தொற்றை அடுத்து பாலின சமத்துவம் என்ற தலைப்பில், ஐ.நா. பெண்கள் மற்றும் ஐ.நா. வளர்ச்சி திட்டம் சார்பில் ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் தாக்கலான இந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-
* கொரோனாவால் தெற்காசியாவில் (இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், பூடான், மாலத்தீவு, நேபாளம், இலங்கை) பாலின வறுமை இடைவெளி இன்னும் மோசம் அடையும்.
* பெருந்தொற்றால் தெற்காசியாவில் வறுமையில் வாடும் பெண்கள் விகிதம் உயரும். 25-34 வயதுக்குட்பட்ட ஆண்களை விட அதிகமான பெண்கள் அடுத்த 10 ஆண்டுகளில் ஏழ்மை நிலையில் இருப்பார்கள்.
* கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோய், 2021-க்குள் 4 கோடியே 70 லட்சம் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளை கடும் வறுமையில் தள்ளிவிடும்.
* உலகிலேயே கடுமையான ஏழ்மை நிலையில் உள்ளவர்களில் 87 சதவீதம் பேர் வசிக்கிற மத்திய மற்றும் தெற்காசியாவிலும், ஆப்பிரிக்காவிலும் வறுமை மேலும் அதிகரிக்கும். அதாவது மத்திய மற்றும் தெற்காசியாவில் மேலும் 5 கோடியே 40 லட்சம் பேரும், ஆப்பிரிக்காவில் 2 கோடியே 40 லட்சம் பேரும் சர்வதேச வறுமைக்கோட்டுக்கு கீழே வாழும் நிலையை கொரோனா ஏற்படுத்தி விடும்.
* தெற்காசியாவில் வறுமை பெருக காரணம், பெருந்தொற்று நோயால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி ஆகும்.
* கொரோனா காலத்துக்கு முன்பாக 2021-ம் ஆண்டில் தெற்காசியாவில் வறுமையில் வாடும் பெண்கள் விகிதம் 10 சதவீதமாக இருக்கும் என கணக்கிடப்பட்டது. இப்போது கொரோனாவுக்கு பின்னே இந்த விகிதம், 13 சதவீதமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
* பெருந்தொற்றால் வறுமை மீண்டும் எழுச்சி பெற்றிருப்பது பாலின வறுமை இடைவெளிகளை மேலும் ஆழமாக்கும். 25-34 வயதுடையவர்களுக்கு இது பொருந்தும்.
* அடுத்த ஆண்டில் (2021) உலகளவில் 100 ஆண்களுக்கு 118 பெண்கள் என்ற அளவில் ஏழைகள் இருப்பார்கள். 2030-ல் இது 100 ஆண்களுக்கு 121 பெண்கள் என்ற அளவுக்கு மேலும் உயரும். 25-34 வயதினரில், 100 ஆண்களுக்கு 118 பெண்கள் என்ற விகிதாசாரம் தெற்காசியாவில் இருக்கும். இதுவே 2030-ல் 100 ஆண்களுக்கு 129 பெண்கள் என்ற அளவுக்கு அதிகரிக்கும்.
* உலகளவில் பெண்கள் வறுமை விகிதம் 2019-2021 இடைவெளி 2.7 சதவீதம் குறையும் என எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் கொரோனாவால் இடைவெளி 9.1 சதவீதமாக அதிகரிக்கும். இந்த பெருந்தொற்று நோய், அடுத்த ஆண்டுக்குள் 9 கோடியே 60 லட்சம் பேரை கூடுதலாக கடும் வறுமையில் தள்ளும். அவர்களில் 4 கோடியே 70 லட்சம் பேர் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் ஆவர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X