என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜப்பான் பிரதமராக யோஷி ஹைட் சுகா நியமிக்கப்பட வாய்ப்பு
Byமாலை மலர்3 Sep 2020 3:27 AM GMT (Updated: 3 Sep 2020 3:27 AM GMT)
ஜப்பானின் தலைமை அமைச்சரவைச் செயலாளரும், ஷின்ஜோ அபேயின் விசுவாசியுமான யோஷிஹைட் சுகா பிரதமராக தேர்வு செய்யப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
டோக்கியோ :
ஜப்பானின் நீண்டகால பிரதமர் என்கிற பெருமைக்கு சொந்தக்காரரான ஷின்ஜோ அபே, தனது உடல் நலனை கருத்தில் கொண்டு அண்மையில் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
எனினும் புதிய பிரதமரை நாடாளுமன்றம் தேர்வு செய்யும் வரை பதவியில் நீடிப்பேன் என அவர் அறிவித்துள்ளார்.
அதன்படி ஜப்பானின் புதிய பிரதமரை தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பு வருகிற 14-ந் தேதி நடைபெற உள்ளது. இதில் ஆளும் தாராளவாத ஜனநாயகக் கட்சியின் முக்கிய பிரதிநிதிகள் மட்டுமே பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் வெளியுறவு மந்திரி பமியோ கிஷிடா, முன்னாள் ராணுவ மந்திரி ஷிகெரு இஷிபா ஆகியோர் பிரதமர் பதவிக்கு போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் ஜப்பானின் தலைமை அமைச்சரவைச் செயலாளரும், ஷின்ஜோ அபேயின் விசுவாசியுமான யோஷிஹைட் சுகா பிரதமராக தேர்வு செய்யப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
ஆளும் தாராளவாத ஜனநாயகக் கட்சியின் தலைவர்கள் பலர் யோஷிஹைட் சுகாவை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளதாக கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் 14-ந் தேதி நடைபெறும் வாக்கெடுப்பில் முக்கிய பிரதிநிதிகள் மட்டுமே பங்கேற்க இருப்பதால் யோஷிஹைட் சுகாவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானின் நீண்டகால பிரதமர் என்கிற பெருமைக்கு சொந்தக்காரரான ஷின்ஜோ அபே, தனது உடல் நலனை கருத்தில் கொண்டு அண்மையில் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
எனினும் புதிய பிரதமரை நாடாளுமன்றம் தேர்வு செய்யும் வரை பதவியில் நீடிப்பேன் என அவர் அறிவித்துள்ளார்.
அதன்படி ஜப்பானின் புதிய பிரதமரை தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பு வருகிற 14-ந் தேதி நடைபெற உள்ளது. இதில் ஆளும் தாராளவாத ஜனநாயகக் கட்சியின் முக்கிய பிரதிநிதிகள் மட்டுமே பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் வெளியுறவு மந்திரி பமியோ கிஷிடா, முன்னாள் ராணுவ மந்திரி ஷிகெரு இஷிபா ஆகியோர் பிரதமர் பதவிக்கு போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் ஜப்பானின் தலைமை அமைச்சரவைச் செயலாளரும், ஷின்ஜோ அபேயின் விசுவாசியுமான யோஷிஹைட் சுகா பிரதமராக தேர்வு செய்யப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
ஆளும் தாராளவாத ஜனநாயகக் கட்சியின் தலைவர்கள் பலர் யோஷிஹைட் சுகாவை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளதாக கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் 14-ந் தேதி நடைபெறும் வாக்கெடுப்பில் முக்கிய பிரதிநிதிகள் மட்டுமே பங்கேற்க இருப்பதால் யோஷிஹைட் சுகாவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X