என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஈரானின் 4 சரக்கு கப்பல்களை பறிமுதல் செய்தது அமெரிக்கா
Byமாலை மலர்15 Aug 2020 3:18 AM GMT (Updated: 15 Aug 2020 3:18 AM GMT)
ஈரானில் இருந்து சுமார் 11 லட்சம் பேரலில் பெட்ரோல் நிரப்பிக் கொண்டு வெனிசுலாவுக்கு புறப்பட்ட லூனா, பாண்டி, பெரிங், பெல்லா என்ற 4 சரக்கு கப்பல்களையும் பறிமுதல் செய்ததாக அமெரிக்கா தற்போது தெரிவித்துள்ளது.
வாஷிங்டன் :
அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான விவகாரத்தில் அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே மோதல் போக்கு நீடிக்கிறது. இந்த விவகாரத்தில் ஈரான் மீது அமெரிக்கா கடுமையான பொருளாதார தடைகளை விதித்து வருகிறது.
குறிப்பாக ஈரானின் முதன்மை தொழிலான கச்சா எண்ணெய் ஏற்றுமதி மீது அமெரிக்கா பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளது.
இதேபோல் எண்ணெய் வளமிக்க தென் அமெரிக்க நாடான வெனிசுலா மீதும் அமெரிக்கா கடுமையான பொருளாதார தடைகளை விதித்து இருக்கிறது.
இந்த நிலையில் பொருளாதார தடைகளை மீறி ஈரான் வெனிசுலாவுக்கு பெட்ரோல் ஏற்றுமதி செய்வதாகவும் எனவே வெனிசுலாவுக்கு பெட்ரோல் கொண்டு செல்லும் ஈரானின் 4 சரக்கு கப்பல்களை பறிமுதல் செய்ய உத்தரவு பிறப்பிக்கக் கோரி அமெரிக்க கோர்ட்டில் கடந்த மாதம் வழக்கு தொடரப்பட்டது.
எனினும் சர்வதேச கடலில் அமெரிக்க கோர்ட்டின் உத்தரவை அமல்படுத்துவது சாத்தியமில்லை என பொருளாதார தடை நிபுணர்கள் கருதினர்.
இதனிடையே, ஈரானில் இருந்து சுமார் 11 லட்சம் பேரலில் பெட்ரோல் நிரப்பிக் கொண்டு வெனிசுலாவுக்கு புறப்பட்ட லூனா, பாண்டி, பெரிங், பெல்லா என்ற 4 சரக்கு கப்பல்களும் திடீரென மாயமாகின.
இந்த கப்பல்களின் நிலை குறித்து இதுவரை தெரியாமல் இருந்து வந்த நிலையில், ஈரானின் 4 சரக்கு கப்பல்களையும் பறிமுதல் செய்ததாக அமெரிக்கா தற்போது தெரிவித்துள்ளது.
அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான விவகாரத்தில் அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே மோதல் போக்கு நீடிக்கிறது. இந்த விவகாரத்தில் ஈரான் மீது அமெரிக்கா கடுமையான பொருளாதார தடைகளை விதித்து வருகிறது.
குறிப்பாக ஈரானின் முதன்மை தொழிலான கச்சா எண்ணெய் ஏற்றுமதி மீது அமெரிக்கா பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளது.
இதேபோல் எண்ணெய் வளமிக்க தென் அமெரிக்க நாடான வெனிசுலா மீதும் அமெரிக்கா கடுமையான பொருளாதார தடைகளை விதித்து இருக்கிறது.
இந்த நிலையில் பொருளாதார தடைகளை மீறி ஈரான் வெனிசுலாவுக்கு பெட்ரோல் ஏற்றுமதி செய்வதாகவும் எனவே வெனிசுலாவுக்கு பெட்ரோல் கொண்டு செல்லும் ஈரானின் 4 சரக்கு கப்பல்களை பறிமுதல் செய்ய உத்தரவு பிறப்பிக்கக் கோரி அமெரிக்க கோர்ட்டில் கடந்த மாதம் வழக்கு தொடரப்பட்டது.
எனினும் சர்வதேச கடலில் அமெரிக்க கோர்ட்டின் உத்தரவை அமல்படுத்துவது சாத்தியமில்லை என பொருளாதார தடை நிபுணர்கள் கருதினர்.
இதனிடையே, ஈரானில் இருந்து சுமார் 11 லட்சம் பேரலில் பெட்ரோல் நிரப்பிக் கொண்டு வெனிசுலாவுக்கு புறப்பட்ட லூனா, பாண்டி, பெரிங், பெல்லா என்ற 4 சரக்கு கப்பல்களும் திடீரென மாயமாகின.
இந்த கப்பல்களின் நிலை குறித்து இதுவரை தெரியாமல் இருந்து வந்த நிலையில், ஈரானின் 4 சரக்கு கப்பல்களையும் பறிமுதல் செய்ததாக அமெரிக்கா தற்போது தெரிவித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X