search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா பரிசோதனை
    X
    கொரோனா பரிசோதனை

    சவுதி அரேபியாவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2.93 லட்சமாக உயர்வு

    சவுதி அரேபியாவில் மேலும் 1,569 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதன் மூலம் அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2.93 லட்சத்தை கடந்துள்ளது.
    ரியாத்

    சீனாவில் உருவான கொரோனா வைரசால் உலகம் முழுவதும் கடும் பாதிப்புகளை சந்தித்து வருகிறது. 

    தற்போதைய நிலவரப்படி கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளில் சவுதி அரேபியா13-வது இடத்தில் உள்ளது.
     
    நேற்று ஒரே நாளில் 1569 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் அந்த நாட்டில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 93 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

    அதேபோல் ஒரேநாளில் 36 பேர் உயிரிழந்ததின் மூலம் இங்கு கொரோனா பலி எண்ணிக்கை 3,269 ஆக உயர்ந்துள்ளது. 
    Next Story
    ×