என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு பின் ஜி-7 மாநாடு: டிரம்ப் பரிசீலனை
Byமாலை மலர்12 Aug 2020 3:33 AM GMT (Updated: 12 Aug 2020 3:33 AM GMT)
அமெரிக்காவில் நவம்பர் மாதம் நடக்க இருக்கும் ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் ஜி-7 மாநாட்டை நடத்துவது குறித்து பரிசீலித்து வருவதாக ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன் :
உலகின் மிகப் பெரிய பொருளாதார நாடுகளின் கூட்டமைப்பாக ஜி-7 நாடுகள் அமைப்பு உள்ளது. இதில் கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா இடம் பெற்றுள்ளன. இந்த ஆண்டு நடக்க உள்ள ஜி-7 மாநாட்டை அமெரிக்கா நடத்த உள்ளது.
ஜூன் மாதமே நடக்க வேண்டிய இந்த மாநாடு கொரோனா தொற்று காரணமாக செப்டம்பர் மாதத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே ஜி-7 நாடுகளில் இந்தியா, ரஷியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இணைக்கப்பட வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறி வருகிறார்.
இந்த நிலையில் அமெரிக்காவில் நவம்பர் மாதம் நடக்க இருக்கும் ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் ஜி-7 மாநாட்டை நடத்துவது குறித்து பரிசீலித்து வருவதாக ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார். பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது இது,குறித்து அவர் கூறுகையில் “தேர்தலுக்குப் பிறகு ஜி-7 மாநாட்டை நடத்த நான் மிகவும் விரும்புகிறேன். மேலும் இந்த மாநாட்டில் பங்கேற்க ரஷிய அதிபர் புதினுக்கு நான் நிச்சயம் அழைப்பு விடுப்பேன். ரஷியாவை ஒரு முக்கிய காரணியாக நான் நினைக்கிறேன்” என கூறினார்.
உலகின் மிகப் பெரிய பொருளாதார நாடுகளின் கூட்டமைப்பாக ஜி-7 நாடுகள் அமைப்பு உள்ளது. இதில் கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா இடம் பெற்றுள்ளன. இந்த ஆண்டு நடக்க உள்ள ஜி-7 மாநாட்டை அமெரிக்கா நடத்த உள்ளது.
ஜூன் மாதமே நடக்க வேண்டிய இந்த மாநாடு கொரோனா தொற்று காரணமாக செப்டம்பர் மாதத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே ஜி-7 நாடுகளில் இந்தியா, ரஷியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இணைக்கப்பட வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறி வருகிறார்.
இந்த நிலையில் அமெரிக்காவில் நவம்பர் மாதம் நடக்க இருக்கும் ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் ஜி-7 மாநாட்டை நடத்துவது குறித்து பரிசீலித்து வருவதாக ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார். பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது இது,குறித்து அவர் கூறுகையில் “தேர்தலுக்குப் பிறகு ஜி-7 மாநாட்டை நடத்த நான் மிகவும் விரும்புகிறேன். மேலும் இந்த மாநாட்டில் பங்கேற்க ரஷிய அதிபர் புதினுக்கு நான் நிச்சயம் அழைப்பு விடுப்பேன். ரஷியாவை ஒரு முக்கிய காரணியாக நான் நினைக்கிறேன்” என கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X